நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2023 ஜனவரியில் 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 102,545 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை
ஜனவரி 2022 இல் பதிவாகிய 82,327 சுற்றுலாப் பயணிகளுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 20,218 சுற்றுலாப் பயணிகளின் அதிகமாக வருகை தந்துள்ளனர்.

இந்த காலகட்டத்தில் ரஷ்யாவிலிருந்து 25,254 சுற்றுலாப் பயணிகளும், இந்தியாவிலிருந்து 13,759 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 8,483 பேரும் வருகை தந்துள்ளனர்.

ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, மாலத்தீவு மற்றும் இஸ்ரேல் ஆகியவை ஜனவரி மாதத்திற்கான மீதமுள்ள மூல சந்தைகளாகும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor