எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடவுள்ள ஐக்கிய தேசியக் கட்சி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானம்
இந்த விடயத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இன்றைய தினம் (10.01.2023) முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor