இலங்கைக்கு பேருந்துகளை வழங்கும் இந்தியா

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு 75 பேருந்துகளை வழங்கியுள்ளது.

இந்த பேருந்துகள், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால், போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் கையளிப்பட்டன.

இலங்கை போக்குவரத்து சபையினால் இவை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

பொது போக்குவரத்து உட்கட்டமைப்பை வலுப்படுத்த, இந்திய உதவியின் மூலம் 500 பேருந்துகள் இலங்கைக்கு வழங்கப்படுகின்றன.

அதன் முதற்கட்டமாக 75 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக இந்தியா உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor