இலங்கையில் இவ் ஆண்டு வெறிநோய் அதிகமாக பரவும்!

இலங்கையில், இந்த ஆண்டு வெறிநோய் வேகமாக பரவக்கூடும் அபாயம் இருப்பதாக என்று பொது சுகாதார கால்நடை சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எல்.டி.கித்சிறி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசிகள் பற்றாக்குறை காரணமாக இந்த ஆபத்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பு, கண்டி, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தடுப்பூசிகள் இருப்பு இல்லை. கடந்த ஆண்டு ரேபிஸ் நோயால் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெப்ரவரி மாதத்திற்குப் பிறகு தடுப்பூசிகள் வழங்கப்பட மாட்டாது

யாழ்ப்பாணம், கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இருந்து தலா ஐந்து இறப்புகள் பதிவாகியுள்ளன, மீதமுள்ளவர்கள் நாட்டின் ஏனைய பகுதிகளை சேர்ந்தவர்கள். நாய் கடித்தால் 95% தொற்று ஏற்படுகிறது.

இலங்கையில் நாய்க்கடி தொடர்பான மரணங்களுக்கு முக்கிய காரணம் வெறிநோய்க்கு எதிரான நாய்களுக்கு தடுப்பூசி போடாததே ஆகும்.

சுமார் 7 மில்லியன் நாய்கள் உள்ளன, ஆண்டுக்கு சுமார் 1.5 மில்லியன் நாய்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. எதிர்வரும் பெப்ரவரி வரை தடுப்பூசி இயக்கங்கள் பணிகளை மேற்கொள்ளும்.

ஆனால் தடுப்பூசி பற்றாக்குறை தொடர்ந்தால் பெப்ரவரி மாதத்திற்குப் பிறகு தடுப்பூசிகள் வழங்கப்பட மாட்டாது.

இதேவேளை 2022 ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் நாய்களுக்கு ரேபிஸுக்கு எதிராக தடுப்பூசி போட்டது மற்றும் 40,000 பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது என்றும் நாய்க்கடியால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் மனிதர்களுக்கு தடுப்பூசிகள் பற்றாக்குறை இல்லை என தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor