இலங்கையின் இளம் கிரிக்கெட் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்தை பாராட்டிய ரவிசந்திரன் அஸ்வின்

எல்பிஎல் 2022 இல் இலங்கையின் இளம் கிரிக்கெட் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்திய சுழற் பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

தனது யூடியூப் தளத்தில் பேசிய அஷ்வின், கிரிக்கெட் வர்ணனையாளர் ரஸ்ஸல் அர்னால்ட் அணுகி, வியாஸ்காந்த் தன்னைத் தொடர்பு கொள்ளக்கோரியதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இளம் கிரிக்கெட் வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் பல்வேறு போட்டிகளில் தனது திறமையை வெளிக்காட்டி வரும் நிலையில்,வியாஸ்காந்த் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வியாஸ்காந்த் சிறந்த கிரிக்கெட் வீரர்.அவர் என்னைப் போலவே உயரமானவர், சிறந்த பந்துவீச்சாளர். வியாஸ்காந்த் கடந்த 2 ஆண்டுகளாக கிரிக்கெட் துறையில் தீவிரமாக செயற்பட்ட நிலையில், எல்பிஎல் 2022 இல் அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்.

மேலும் போட்டியின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதையும் பெற்றுள்ளார். அவரது எதிர்காலம் குறித்து விசாரித்தபோது, ​​வியாஸ்காந்த் என்னிடம் இருந்து உதவிக்குறிப்புகளைப் பெற விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

வியாஸ்காந்த் நான் உங்கள் பயணத்தை அவதானித்து வருகிறேன். இந்திய – இலங்கை அணிகளுக்கிடையிலான ஒரு போட்டி குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது. அப்படி போட்டி இலங்கையில் இடம்பெறுமானால் உங்களை இலங்கையில் சந்திப்பேன் என்று நம்புகின்றேன். உங்கள் தொழில், வாழ்க்கை அனைத்திற்கும் நல்வாழ்த்துக்கள் என்றும் அஸ்வின் மேலும் பாராட்டியுள்ளார்.

இலங்கையின் இளம் கிரிக்கெட் வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் 2023ஆம் ஆண்டுக்கான பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor