பிணையில் விடுதலையான பின் தனுஷ்க குணதிலக்க

அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர் வெளியேறிய சில புகைப்படங்களை அவுஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

20க்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிக்காக அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த நிலையில், தனுஷ்க, பெண் ஒருவரை பலவந்தமாக பாலியல் உறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்.

கடுமையான நிபந்தனைகளுடன் பிணை
இந்த நிலையில் கடுமையான நிபந்தனைகளுடன் தனுஷ்க குணதிலக்கவுக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை பிணை வழங்கியது.

 

இதற்கமைய, தனுஷ்க குணதிலக்க நேற்று (22) ஈஸ்ட்வுட் பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, பிணை நிபந்தனைகளின் படி அவர் தினமும் பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor