பிக்பாஸ் சீசன் 6 கலந்து கொண்டுள்ள அசல் குறித்து ஆத்திரமடையும் மக்கள்!

பிக்பாஸ் சீசன் 6 ஆரம்பமான நிலையில் தற்போது 3ஆவது வாரத்தையும் கடக்கவிருக்கின்றது. இதில் நவரசங்களும் பொருந்தியவாறு ஒவ்வொரு போட்டியாளரும் ஒவ்வொரு விதமாக காணப்படுகின்றனர்.

அதிலும் குறிப்பாக அசல் கோளாரின் அலப்பறைகளாக காணப்படுகின்றார்.

இவருக்கு இணையதளவாசிகள் பலரும் “தடவல் மன்னன், சில்மிஷ சிகாமணி” என தினம் ஒரு பெயரை வைத்து அழைத்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் ஏதோ ஜாலியான முறையில் பேசுகிறார் என நினைத்தால் வயது வித்தியாசம் பார்க்காமல் மகேஸ்வரி, ரச்சிதா என அனைவருடனும் தவறான எண்ணத்துடன் பழகுவது மட்டுமல்லாது அவருடைய செயல்களும் அவ்வாறு காணப்படுகின்றது.

இவர்கள் அனைவரையும் விட குறிப்பாக நிவாஷினியிடம் ஒருபடி மேலே சென்று கடிப்பது, கட்டிப்பிடிப்பது என எல்லை மீறி வருகிறார். பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே, ரசிகர்கள் பலரும் இதை கண்டித்து வருகின்றனர்.

கடந்த வாரம் கூட அசல் கோளாரிடம் கமல் சார் இதுகுறித்து கேட்பார் என்று பார்த்தால், எதுவுமே சொல்லாமல் நிகழ்ச்சியை முடித்துவிட்டார். இதனால், ரசிகர்களின் ஒட்டுமொத்த கோபமும் தொகுப்பாளர் கமல் மீது திரும்பி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை எடிட் செய்து பல விடயங்களை மறைத்து 1மணி நேரமாக ஒளிபரப்பினாலும், 24 மணி நேர நேரலையில் பல விடயங்கள் மாட்டிக்கொள்கிறது.

அசல் கோளாரின் இந்த அநாகரிக செயற்பாடுகளுக்கு நிவாஷினி எதுவுமே சொல்லாமல் இருப்பது ரசிகர்களுக்கு இன்னும் கடுப்பாக இருக்கிறது.

இதே சில்மிஷத்தை குயின்ஷியிடமும் காட்டி இருக்கின்றார். ஆனால் கடுப்பான குயின்ஷி அசலை பார்த்து முறைத்தால், அங்கிருந்து அமைதியாக சென்றுவிட்டார் அசல். ஆனால், நிவாஷினி அசல் எது செய்தாலும், பல்லை காட்டிக்கொண்டே அதற்கு சம்மதம் தெரிவிக்கும் வகையிலேயே இருக்கிறார்.

பெண்களை தொடுவதையும், சில்மிஷம் செய்வதையும் பார்த்த ரசிகர்கள் பலர் “அசல் கேம் விளையாட பிக்பாஸ் வீட்டிற்கு வந்த மாதிரி தெரியவில்லை. ஏதோ ஹனிமூனுக்கு வந்த மாதிரி நடந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியை குழந்தைகளும் பார்க்கிறார். தயவு செய்து அசலை கண்டித்து வெளியில் அனுப்ப வேண்டும்” என மறுபடியும் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor