யாழ் நல்லூர் ஆலயத்தில் இடம்பெற இருக்கும் கந்தஷஷ்டி உற்சவம் தொடர்பான அறிவிப்பு!

நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தஷஷ்டி உற்சவத்தை முன்னிட்டு நல்லைக் கந்தன் வெளி வீதியுலா வரும்வேளையில் 26.10.2022 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 29.10.2022 ஆம் திகதி வரை மாலை 5.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரையிலும் இடம் பெற உள்ளது.

சூரன்போர் திருவிழாவை முன்னிட்டு எதிர்வரும் 30.10.2022 அன்று ந.ப 12.00 மணி தொடக்கம் பி.ப 6.00 மணி வரையிலும், 31.10.2022 அன்றுமாலை 5.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரையும், நல்லூர் ஆலய சுற்றாடலில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வாகனங்கள் உள் நுழைய முடியாதவாறு பாதைகள் மூடப்பட்டிருக்கும்.

இந் நேரங்களில் மாத்திரம் வாகனங்கள் ஆலயச் சுற்றாடலினைத் தவிர்த்து வழமையான மாற்றுப் பாதைகளூடாக பயணிக்க முடியும் என்றும் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor