குத்தகை செலுத்தாத வாகனங்கள் தொடர்பில் அமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு!

வங்கிகளும், நிதி நிறுவனங்களும் குத்தகை செலுத்தாத வாகனங்களை உரிமையாளரிடமிருந்து ஆட்சேபனை இல்லாத பட்சத்தில் மாத்திரமே மீளப்பெற்றுக்கொள்ள முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதற்கமைய, வாகனங்களை மீளப்பெறுவதற்கு பரேட் சட்டம் (Parate execution) நடைமுறைப்படுத்தப்படுவதில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.... Read more »

இலங்கை பரீட்சைத் திணைகளத்தின் முக்கிய அறிவிப்பு!

இலங்கை பரீட்சைகள் திணைக்களம் ஆசிரியர் கலாசாலை இறுதிப் பரீட்சை மற்றும் பயிற்றப்படாத ஆசிரியர்களுக்கான பரீட்சைகள் தொடர்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், ஆசிரியர் கலாச்சாலை பரீட்சைகள் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பரீட்சை... Read more »
Ad Widget

யாழில் சிசுவின் சடலத்தால் சிக்கலில் மாட்டிக் கொண்ட யாழ் மாநகர ஆணையாளர்!

யாழ்.நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் 16ஆம் திகதி முன்னிலையாகுமாறு யாழ்.மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு கட்டளை வழங்கப்பட்டுள்ளது. ஆறுகால்மடம், கோம்பயன்மணல் மயானத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றினுள் இருந்து கடந்த வியாழக்கிழமை (10) சிதைவடைந்த நிலையில் குழந்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டது. நேரில் சென்று... Read more »

இத்தாலியில் வசிக்கும் நபரிடம் ஏமாந்த யாழ் இளைஞர்

வெளிநாடொன்றிற்கு யாழ்ப்பாண இளைஞர் ஒருவரை அனுப்புவதாக கூறி நபர் ஒருவர் சுமார் 25 இலட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இத்தாலியில் வசிக்கும் யாழ்ப்பாணம் வலிகாமத்தை சேர்ந்த நபர் ஒருவர் தரகர்... Read more »

எரிபொருள் விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

எரிபொருளின் விலையை நிர்ணயிப்பது பெற்றோலிய சட்டப்பூர்வ கழகத்தின் செயல்பாடு அல்ல என்றும், பெற்றோலியத்தின் விலை நிர்ணயம் தொடர்பாக சினோபெக் நிறுவனத்திடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், எரிசக்தி அமைச்சினால் எரிபொருள் விலை நிர்ணயம் செய்யப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிடுகிறது.... Read more »

மிகிந்தலையில் சோகம் மின்னல் தாக்கியதில் மூவர் உயிரிழப்பு!

மிஹிந்தலை பகுதியில் மின்னல் தாக்கி மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளனர். இச் சம்பவம் நேற்றைய தினம் (11-08-2023) மாலை இடம்பெற்றுள்ளது. மிஹிந்தலை, தம்மன்னாவ வெவையில் மீன்பிடிக்கச் சென்ற 7 பேர் கொண்ட குழுவில் மூன்று பேர் மின்னல்... Read more »

இன்றைய ராசிபலன்12.08.2023

மேஷ ராசி அன்பர்களே! உற்சாகமாகச் செயல்படும் நாள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்கள் குடும்பம் தொடர்பான விஷயத்தில் உங்களிடம் ஆலோ சனை கேட்டு வருவார்கள். சிலருக்கு அவ்வப்போது சிறுசிறு சலனங்கள் ஏற்பட்டு நீங்கும். மாலை யில் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு... Read more »

கொழும்பு நகர மண்டபத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு

கொழும்பு நகர மண்டபத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர மண்டபத்தை சூழவுள்ள கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று (11) பிற்பகல் முன்னெடுக்கப்படவுள்ளமையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையினரைப் பயன்படுத்தி அப்பகுதியில் பாதுகாப்பை... Read more »

சைகிள் ஓட்டப் போட்டியில் ஈடுபட்ட மாணவன் உயிரிழப்பு!

கொழும்பு – குருணாகல் வீதியின் வால்பிட்ட பகுதியில் கசைக்கிளோட்டப் பயிற்சியில் ஈடுபட்ட பாடசாலை மாணவர் ஒருவர் பஸ் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (10.08.2023) இடம்பெற்றுள்ளது. சைக்கிளோட்டப் போட்டியில் பங்குபற்றும் நோக்குடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது எதிரே வந்த... Read more »

மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

எதிர்வரும் 16ஆம் திகதிக்கு பின் தென் மாகாணத்தில் சுமார் 10 நாட்களுக்கு இரண்டு மணித்தியால மின்வெட்டு ஏற்படும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிரேஷ்ட மின்சார பொறியியலாளர் சங்கத்தின் பேச்சாளர் நந்திக பத்திரகே தெரிவித்துள்ளார். எனினும் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு இருக்காது என்றும் அவர்... Read more »