திருடனை தப்ப விட்ட மனைவியை தாக்கிய கணவன்

யாழில் தோட்டம் ஒன்றில் வாழைக்குலை வெட்டியவனை கையும் களவுமாக பிடித்த நிலையில், திருடனை மனைவி பாவம் பார்த்து தப்பிக்க விட்டதை அடுத்து கணவர் மனைவொஇயை நையப்புடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் யாழ் உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வாழைக்குலை வெட்டிய... Read more »

யாழில் கிணற்றில் விழுந்து உயிரிழந்த முதியவர்

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்ணாகம் பகுதியில் முதியவர் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த முதியவர் இன்றைய தினம் தண்ணீர் எடுக்க சென்ற போது தவறுதலாக கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Read more »
Ad Widget Ad Widget

விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்ப்படுத்திய அரசின் அறிவிப்பு!

நாட்டில் எதிர்வரும் பெரும்போகத்தில் உர விநியோகத்தில் இருந்து அரசாங்கம் விலகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) வெளியிட்டுள்ளார். இதற்கமைய, உர விநியோகம் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இரசாயன உரம், சேதன உரம், விதைகள் மற்றும்... Read more »

துண்டாடப்பட்ட பெண்ணின் கையை பொருத்தி சாதனை படைத்த மருத்துவர்கள்

உடலில் இருந்து வெட்டப்பட்ட கை 4 மணித்தியால சத்திர சிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாக பொருத்தப்பட்டதாக கேகாலை பொது வைத்தியசாலை தெரிவித்துள்ளது. கேகாலை எரபந்துபிட்டிய பிரதேசத்தில் உறவினர்களுக்கிடையிலான ஏற்பட்ட தகராறு எல்லை மீறி சென்றதையடுத்து 21 வயதான பெண் மீது மன்னா கத்தியால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.... Read more »

இன்றைய ராசிபலன்06.04.2023

மேஷம் மேஷம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். ‌ வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள்.... Read more »

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள மகிழ்வான செய்தி!

நாட்டில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும், தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு, கல்விமாணிப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய, வடக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ, தென் மற்றும் மேல்மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர்... Read more »

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி இன்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 313.37 ரூபாயாகவும் விற்பனை விலை 330.50 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. இதன்போது நேற்று டொலரின் கொள்முதல்... Read more »

எரிபொருள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அடுத்த சில நாட்களில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் பிராந்திய முகாமையாளர்கள் எரிபொருள் முற்பதிவுகளை காசோலைகளுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளனர். பணம் கிடைப்பதில் சிக்கல்... Read more »

வழக்கம்பரை அம்மன் ஆலய மண்டபத்தில் வழங்கப்பட்ட உதவி திட்டங்கள்

இன்றையதினம் வழக்கம்பரை ஆன்மீக அறக்கட்டளை மற்றும் சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளை ஆகியன இணைந்து நடாத்திய உதவித்திட்டங்கள் வழங்கும் நிகழ்வு வழக்கம்பரை அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் சங்கானை... Read more »

தமிழர்களின் சமஷ்டி கோரிக்கையை சிங்கள மக்களிடம் மறைக்க முயல்கிறார் வீரசேகர-வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

தமிழர்களின் சமஷ்டி கோரிக்கையை சிங்கள மக்களிடம் மறைக்க முயல்கிறார் வீரசேகர வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அவர்கள் அண்மையில் தென்னிலங்கை ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியில் தமிழ் மக்கள் சமஷ்டியை கோரவில்லை தமிழ் அரசியல்வாதிகளும் பிரிவினையை... Read more »