மின்னல் தாக்கியதில் இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

மின்னல் தாக்கி இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. புத்தளம் பள்ளம, அடம்மன வெலிய பிரதேசத்தில் இவ் அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடம்மன எம்.ஏ. பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய மல்காந்தி என்ற தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கணவனின்... Read more »

புறாக்களை எரிக்கின்ற டிக்டாக் காணொளியை வெளியிட்ட இளைஞர்கள் கைது!

களுத்துறை உள்ள நகரமொன்றில் சுதந்திரமாக வளர்க்கப்பட்ட புறாக்களை திருடி, அதனை கொன்று எரிக்கின்ற காணொளியை, டிக்டாக் காணொளியாக வெளியிட்ட இளைஞர்கள் குழுவை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த காணொளியை, குறித்த இளைஞர்கள் புறாக்களின் உரிமையாளரின் தொலைபேசிக்கும் அனுப்பி வைத்துள்ளனர். இச் சம்பவம் அளுத்கம தர்காவில்... Read more »
Ad Widget Ad Widget

நண்பனை கொலை செய்து விட்டு வெளிநாடு செல்ல முற்ப்பட்டு வெளிநாடு செல்ல முற்ப்பட்ட நபர் கைது!

தனது நண்பரை கத்தியால் குத்திக் கொலை செய்த நபரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அம்பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளானர். இந்த சம்பவம் அம்பலாங்கொடை ஹிரேவத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஒன்றாக உணவருந்திய பின்னர் தனது நண்பரை கத்தியால் குத்திக்... Read more »

நீர் கட்டணத்தை அதிகரிக்க ஆலோசனை!

இலங்கையில் நீர் கட்டணத்தை அதிகரிக்க நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை ஆலோசித்து வருவதாக சபையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். மின் கட்டண உயர்வால், நீர் சுத்திகரிப்புக்கு அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதால், நீர் சுத்திகரிப்பு செலவை ஈடுகட்ட இந்த நடவடிக்கை எடுக்க தீர்மானக்கப்பட்டுள்ளது. மின்கட்டண... Read more »

காலநிலை தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ... Read more »

உலக சாதனை படைத்த இலங்கை சிறுமி!

அம்பாறை மாவட்டம் கல்முனை துறைவந்தியமேடு நான்கு வயது சிறுமி கிரண்யாஸ்ரீ எழுதுவதில் இரு உலக சாதனைபடைத்துள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட துறைவந்தியமேடு கிராமத்தைச் சேர்ந்த ஜனாசுகிர்தன் கிரண்யாஸ்ரீ எனும் நான்கு வயதுச் சிறுமி இரண்டு உலக சாதனைகள் படைத்துள்ளார். உலக சாதனை... Read more »

இளம் பிக்குவை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்குகள் தப்பி ஓட்டம்!

இளம் பிக்குவை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த பயாகல கோரக்கதெனிய விகாரையின் விகாராதிபதி உட்பட மூன்று தேரர்கள் விஹாரையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பயாகல கோரக்கதெனிய விகாரையில் சமீபத்தில் இடம்பெற்றுள்ளது. 11 வயதான சிறுவனின் தாயார் செய்த... Read more »

இலங்கை பணவீக்கம் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள செய்தி!

இலங்கையின் பணவீக்கம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் காணப்பட்ட 50.3 வீத பணவீக்கம் ஏப்ரலில் 35.3 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தளம்பல் மிக்க உணவு மற்றும் உணவல்லாப் பொருட்களின் விலைகள்... Read more »

இளம் மகளை வெட்டி கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தந்தை!

மொனராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தந்தை ஒருவர் தனது இளம் மகளை வெட்டிக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 17 வயது மகளையே இன்றைய தினம் (29-04-2023) பகல் வீட்டில் வைத்து தந்தை... Read more »

யாழ் மூளாய் பகுதியில் ஆண் ஒருவர் மீது கொடூர தாக்குதல்!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில் ஆணொருவரை சில நபர்கள் கூரிய ஆயுத்தால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்றையதினம் (29-04-2023) மூளாப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சம்பவத்தில் மூளாய் பகுதியைச் சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க ஆணொருவரே... Read more »