க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் யாழ்.இந்துக்கல்லூரி மாணவர்கள் சாதனை

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது. இவ்வாறு வெளியான பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்.இந்துக்கல்லூரி மாணவர்கள் 99 சதவீதம் சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனைப்படைத்துள்ளனர். அந்த வகையில், பரீட்சைக்கு தோற்றிய 255 மாணவர்களில் 62... Read more »

யாழில் வீதி ஓரங்களில் முச்சக்கர வண்டிக்குள் போதைப் பொருளை எடுக்கும் நபர்கள்

யாழில் வித்தியாசமான முறையில் போதைப்பொருளை நபர்கள் எடுத்துக் கொள்வதாக சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தவபாலன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஒருநாள் யாழ்ப்பாண நகரில் உள்ள ஒதுக்குப்புற ஒழுங்கையில், தேசிக்காய் கோதும் ,ஊசி... Read more »
Ad Widget

வனமே என் இனமே காணொலிப் பாடல் நல்லூரில் இன்று வெளியீடு

வனமே என் இனமே காணொலிப் பாடல் இன்று நல்லூர் சங்கிலியன் பூங்காவில் வெளியிடப்படவுள்ளது. தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் இந்தக் காணொலிப் பாடலை தயாரித்துள்ளார். Read more »

யாழில் முதலை! பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் முதலையொன்று வீதியில் காணப்பட்டுள்ளது அச்சுவேலியில் இருந்து தொண்டைமானாறு செல்லும் வீதியிலேயே முதலை வீதிக்கு குறுக்காக உயிரிழந்த நிலையில் இருப்பதாக இன்று அவ்வீதியால் பயணித்தவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த முதலையை அகற்றுவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என... Read more »

யாழில் பொலிஸாரின் சமிக்ஞையை மீறி சென்ற இளைஞருக்கு ஒரு மாத சிறை தண்டனை!

யாழ். நெல்லியடியில் பொலிஸாரின் சமிக்ஞையை மீறி மோட்டார் சைக்கிள் செலுத்திய இளைஞருக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு குறித்த இளைஞர் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (23.11.2022) முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த இளைஞருக்கு ஒரு மாத... Read more »

யாழில் விடுதலைப் புலிகளின் தலைவர் வீட்டை சுற்றி பலத்த பாதுகாப்பு!

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் வீட்டினை சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. எதிர்வரும் 26ஆம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினம். அதேவேளை எதிர்வரும் 27ஆம் மாவீரர் தினமும் அனுஷ்டிக்கப்படவுள்ளது. பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு... Read more »

யாழில் சவுதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்ற மனைவியை மீட்டு தர கோரும் கணவன்!

சவுதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்ற தனது மனைவியினை மீட்டுத்தருமாறு கோரி இளம் கணவர், யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கன்சீயூலர் அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். அம்பாள் நகர் சாந்தபுரம் கிளிநொச்சி சேர்ந்த வடிவேல் லிங்கேஷ்வரன் என்ற இளம் குடும்பஸ்தர் தனது மனைவியை மீட்டுத்... Read more »

யாழ் பிரபல பாடசாலை ஆசிரியரை தாக்கிய மாணவனின் தந்தை கைது!

யாழில் பிரபல பாடசாலையொன்றில் ஆசிரியர் மீது தாக்குதல் மேற்கொண்ட மாணவனின் தந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் ஒருவலை தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் இன்று யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதன்போதே சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், குறித்த சந்தேகநபரை... Read more »

யாழில் பாண் விற்கும் வாகனம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – காட்டுப்புலத்தில் பாண் விற்பனை செய்யும் வாகனம் மீது நேற்றிரவு (22.11.2022) தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. மாதகல் பகுதியில் உள்ள வெதுப்பக உற்பத்தி நிறுவனத்தின் உற்பத்திகள் சுழிபுரம் பகுதிக்கு வாகனம் மூலம் எடுத்துச் சென்று விற்பனை செய்து வருவது வழமை.... Read more »

யாழ் வல்லைப் பகுதியில் நீரில் மூழ்கி மாயமான இளைஞன் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் வல்லைப் பாலத்தில் நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து நீரில் மூழ்கி காணாமல்போன இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடற்படையினரால் இன்று (23.11.2022) காலை குறித்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இளைஞன் யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில்... Read more »