மூன்று மாணவர்கள் பயணித்த உந்துருளி விபத்து – ஒருவர் பலி!

கண்டி – உடதலவின்ன பகுதியில் மூன்று மாணவர்கள் பயணித்த உந்துருளி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். 16 வயதுடைய மாணவர்கள் மூவர் உந்துருளியில் பயணித்தபோது வேகக்கட்டுப்பாட்டை இழந்து இடதுபக்கத்தில் உள்ள மதிலொன்றில் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் காயமடைந்த மாணவர்கள்... Read more »

சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட இலத்திரனியல் சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் டுபாயிலிருந்து நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். ஜா-எல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக... Read more »
Ad Widget

இலங்கைக்கு 4ஆவது தவணை IMF நிதி கையளிப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு, 48 மாத கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (Extended Fund Facility) திட்டத்தின் கீழ் இலங்கையுடனான மூன்றாவது மதிப்பாய்வு நிறைவு செய்துள்ள நிலையில், இதன் மூலம், பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதற்காக, இலங்கைக்கு உடனடி... Read more »

எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை

எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய மார்ச் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதற்கமைய தற்போது அமுலில் உள்ள விலைகளில் எரிபொருட்கள் தொடர்ந்தும் விற்பனை செய்யப்படுமென... Read more »

வழக்குகளின் எண்ணிக்கைக்கு அமைய சட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை

வழக்குகளின் எண்ணிக்கைக்கு அமைய சட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை நீதிமன்றக் கட்டமைப்பில் தீர்க்கப்பட வேண்டியுள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், சட்டத்தை நிலைநாட்டும் செற்பாட்டில் காணப்படும் கணிசமான காலதாமதம் தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைபாட்டு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.... Read more »

முன்னாள் ஜனாதிபதிகள் பாதாள உலகக் குழுவினரைக் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தினார்கள்-பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர்.

முன்னாள் ஜனாதிபதிகள் பல்வேறு குற்றங்களை செய்ய பாதாள உலக நபர்களை பயன்படுத்தியுள்ளனர் என பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். “காலஞ்சென்ற ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன கோனவல சுனிலை பயன்படுத்தி உச்ச நீதிமன்ற நீதிபதியின் வீட்டின் மீது கல்... Read more »

தேஷபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களை கைது செய்ய உத்தரவு! 

முன்னாள் பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உட்பட 06 சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2023 டிசம்பர் 31ஆம் திகதி மாத்தறை, வெலிகம பலேன... Read more »

முன்னாள் சபாநாயகரின் எரிபொருள் செலவு மாதத்திற்கு 40 லட்சம்-அமைச்சர் பிமல் ரத்நாயக்க

நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் 70 பணியாளர்கள் இருந்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில் அவரது பதவிக்காலத்தில் 9 வாகனங்களுக்கு 33 மில்லியன் ரூபாய் மதிப்பிலான எரிபொருள் பயன்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது: “முன்னாள்... Read more »

போராட்டத்தில் தீக்கிரையாக்கப்பட்ட ஞானக்காவின் வீட்டிற்கு அரசாங்கம் 28 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது.

2022 ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட அரகலய போராட்டத்தின் போது ஜோதிடர் ஞானக்காவின் வீடு மற்றும் புனித தலத்திற்கு ஏற்பட்ட சேதத்திற்காக முன்னாள் அரசாங்கம் 28 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது என ஆளும் கட்சி தலைமை அமைப்பாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.... Read more »

மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவன் ஆலயத்தில் சிறப்பாக இடம் பெற்ற மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள்(video) .

மகா சிவராத்திரியை முன்னிட்டு பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாக காணப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவாலயத்தில் நேற்றைய தினம் (26.02)புதன் கிழமை   விசேட பூஜை வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றன. சிறப்பான முறையில் ஆறு சாம பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இதன்போது ஆலய முன்றலில்... Read more »