விடுமுறை அறிவிப்பு: ஊழியர்களுக்கு மகிழ்ச்சி

வரும் மே 6 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் விடுமுறை வழங்க வேண்டும்... Read more »

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின. பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. அதன்படி https://www.doenets.lk/ எனும் இணையத்தளத்திற்குப் பிரவேசிப்பதன் மூலம் பரீட்சை பெறுபேறுகளைப் பார்வையிட முடியும். Read more »
Ad Widget

திங்கட்கிழமை பாடசாலை விடுமுறையா?

ஸ்ரீ தலதா மாளிகையின் பல் நினைவுச்சின்ன கண்காட்சிக்காக விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகள், எதிர்வரும் திங்கட்கிழமை (28) முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி நகரிலும் அதை அண்டிய பகுதிகளிலும் மூடப்பட்டிருந்த 24 பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் திறக்கப்படும் என்று மத்திய மாகாண... Read more »

இரகசியத்தை வெளியிட தயாராகும் தென்னிலங்கை அரசியல்வாதி

யாருக்கும் தெரியாத முக்கிய இரகசியத்தை நாளை வெளியிடவுள்ளதாக முன்னாள் அமைச்சரும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில திட்டமிட்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டது. அவற்றில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவை தொடர்பில் முக்கிய... Read more »

சிக்கலில் புலம்பெயர் தமிழர்கள்

சுவிட்சர்லாந்தில் இலங்கையை (Srilanka) சேர்ந்த தமிழர்கள் மோசடியாளர்களிடம் சிக்கி பணத்தை இழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தில் செங்காளன் மாநிலத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் சுமார் 1300 பிராங்குகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த தமிழ் இளைஞன்,... Read more »

மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு

மினுவங்கொடை பத்தண்டுவன சந்தியில் இன்றையதினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தின் போது 36 வயதுடைய நபர் காயமடைந்துள்ளதுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க உறுதிப்படுத்தியுள்ளார் மேலும், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்... Read more »

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி

ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளது. GSP+ சலுகை தொடர்பான நிபந்தனைகள் குறித்த முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்காக இந்த குழு வருகிறது. இந்தக் குழு எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின்... Read more »

பிள்ளையானை சந்திக்க பாடுபடும் ராயபக்சர்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் அரசியல் அதிகாரத்தை இலக்காகக் கொண்ட ஒரு கொடூரமான குற்றம் இருப்பதாக ஆளும் கட்சியின் சபைத் தலைவரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார். நிவித்திகல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தற்போது தடுப்புக்காவலில் உள்ள முன்னாள்... Read more »

துறவியின் உடையில் நுழைய முயன்ற மாணவன் கைது!

பௌத்த துறவியின் உடையில் ஸ்ரீ தலதா மாளிகைக்குள்நுழைய முயன்ற பள்ளி மாணவன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் கம்பஹா, கிரல்லவெல பகுதியைச் சேர்ந்த18 வயதுடைய பாடசாலை மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். புத்த துறவிகளுக்கான ஒதுக்கப்பட்ட வரிசை வழியாகதலதா மாளிகைக்குள் நுழைய... Read more »

வத்திக்கானுக்கு புறப்பட்ட அமைச்சர் விஜத

இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்வதற்காக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று வியாழக்கிழமை (25) வத்திக்கானுக்கு பயணமாகியுள்ளார். இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எதிஹாட் விமான சேவைக்கு... Read more »