இந்திய இராணுவத்தின் 30ஆவது தளபதி

இந்திய பிரதமராக நரேந்திர மோடி 3 ஆவது முறையாக பதவியேற்றதன் பின்னர், இந்திய இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இராணுவத் தளபதியாக செயல்படும் ஜெனரல் மனோஸ் பாண்டேவின் பதவிக்காலம் எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதியுடன் நிறைவுறுகின்ற நிலையில்,... Read more »

15 வயது தமிழ் சிறுமியை காதலனுக்கும் நண்பனுக்கும் இரையாக்கி கொடூர பெண்..!

15 வயது சிறுமியொருவருக்கு இனிப்பு பண்டத்தில் மயக்க மருந்து கொடுத்து தனது நண்பர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய உதவிபுரிந்ததாக சினிமா ஆடை வடிவமைப்பாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னை – சாலிகிராமம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் பின்னணி சிறுமி, தனது நண்பர்களுடன்... Read more »
Ad Widget

உத்தர பிரதேசத்தில் தீ டெல்லியில் மின் விநியோகம் தடை

இந்தியா – உத்தரபிரதேச மாநிலமான மண்டோலாவில் அமைந்துள்ள துணை மின்நிலையத்தில் நேற்று (11) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, முதல்வர் இல்லத்தை சூழவுள்ள பகுதிகள் உட்பட டெல்லியில் பல பிரதேசங்களில் மின் விநியோகத்தடை ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அரச பொறியியலாளர்களை... Read more »

வி.கே.பாண்டியன் மீதான விமர்சனம்: நவீன் பட்நாயக் கவலை

ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தளத்தின் தோல்விக்கு வி.கே.பாண்டியனை விமர்சிப்பது துரதிர்ஷ்டவசமானது என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய நவீன் பட்நாயக், “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கிடைத்துள்ள தோல்வியை மனதார ஏற்றுக்கொள்கிறேன். மாநில... Read more »

மோடி அமைச்சரவையில் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் புறக்கணிப்பு

இந்திய பிரதமராக மூன்றாவது முறை தெரிவான நரேந்திர மோடியுடன் அவரது அரசாங்கத்தின் அமைச்சரவையும் பொறுப்பேற்றது. இந்த நிலையில் மோடியின் அமைச்சரவையில் தமிழர்கள் எவரும் இல்லையென்ற குற்றச்சாட்டு தமிழ் நாட்டில் இருந்து முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு கடும் எதிர்ப்புகளும் வெளியாகியுள்ளன. தமிழ் நாட்டை சேர்ந்த மூவருக்கு அமைச்சரவையில்... Read more »

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர்: சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி ஏகமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சோனியா காந்தியின் பெயரை காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்மொழிந்தார். கவுரவ் கோகாய், தாரிக் அன்வர் உள்ளிட்டோர் கார்கே முன்மொழிந்ததை வழிமொழிந்ததன் பின்னர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற... Read more »

மக்களவை எதிர்கட்சித் தலைவராக ராகுல் காந்தி: ஏகமனதாக தேர்வு

இந்திய மக்களவை எதிர்கட்சித் தலைவராக ராகுல் காந்தி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டதை காங்கிரஸ் கட்சியின் உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் நீடிக்கப்பட்ட செயற்குழு கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் டெல்லியில் இன்று சனிக்கிழமை (08.06.24) இடம்பெற்றது. இதன்போது மக்களவை... Read more »

மூன்றாவது முறையாக பிரதமராகின்றார் மோடி: எட்டாம் திகதி பதவியேற்பு

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாகவும் எதிர்வரும் எட்டாம் திகதி நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், பதவியேற்பு நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ஆம் திகதி முதல் ஜூன் முதலாம் திகதி வரை இடம்பெற்றிருந்தது. தேர்தல்... Read more »

இலங்கை சேர்ந்த தமிழர்கள் ராமேஸ்வரத்தில் தஞ்சம்

முல்லைத்தீவில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் இன்று புதன்கிழமை (05) அதிகாலை ராமேஸ்வரத்தில் தஞ்சமடைந்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை (04) முல்லைத்தீவில் இருந்து மன்னாருக்கு சென்று மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் புறப்பட்டு இன்று புதன்கிழமை (05) அதிகாலை ராமேஸ்வரம்... Read more »

ராமர் கோவில்: உத்தரப்பிரதேசத்தில் பாஜக தோல்வி கண்டது எப்படி?

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290க்கும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234க்கும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக கட்சி 240 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 99 இடங்களிலும்... Read more »