கனேடிய நாடாளுமன்றத்தில் தமிழின படுகொலை நினைவு நாள் நிகழ்வு

தமிழின படுகொலை நினைவு நாள் நிகழ்வு கனேடிய நாடாளுமன்ற வளாகத்தில் நினைவுகூரப்பட்டுள்ளது. கியூபெக் தமிழ் சமூக அமைப்பு மற்றும் அமைச்சரும், ஸ்காபுரோ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஹரி ஆனந்தசங்கரி அவர்களின் ஒருங்கமைப்பில் பல கனேடிய தமிழ் அமைப்புகளின் கூட்டாக இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது. நிகழ்வில் கனேடிய... Read more »

அமெரிக்காவின் எச்சரிக்கை: இஸ்ரேல் கவலை

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் எச்சரிக்கை குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலிய தூதுவர் எர்டன் கவலை வெளியிட்டுள்ளார். காசாவின் முக்கிய நகரமான ரஃபாவில் தரை வழித்தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்கா இஸ்ரேலுக்கான ஆயுத உதவிகளை நிறுத்தும் என ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்திருந்தார். “ரஃபா... Read more »
Ad Widget

சக்தி வாய்ந்த ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்திய அமெரிக்கா

இஸ்ரேலுக்கு சக்திவாய்ந்த ஆயுதங்களை வழங்குவதை வாஷிங்டன் நிறுத்திவிட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ள கருத்தையடுத்து, காசாவின் தெற்கு நகரமான ரஃபாவின் புறநகரில் இஸ்ரேலிய துருப்புக்களுடன் போரிடப்போவதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. ரஃபா மீதான இஸ்ரேலிய படையெடுப்பைத் தடுக்க அமெரிக்கா முற்பட்டாலும் அது பயனளிக்கவில்லை. ஹமாஸுடனான போர்நிறுத்த... Read more »

‘Miss USA’ மகுடத்தை திருப்பிக்கொடுத்த அழகி

‘Miss USA’ அழகிப் பட்டம் வென்ற நோலியா வோய்கட், மனநலக் காரணங்களுக்காக தனது கிரீடத்தைக் கைவிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் நடந்த வருடாந்த அழகிப் போட்டியில் வெற்றியடைந்த வோய்கட், ‘உங்கள் மன ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை கொடுங்கள். உங்கள் குரலை... Read more »

கெரெம் ஷாலோம் எல்லையை திறந்த இஸ்ரேல்

எகிப்துக்கும் காசாவுக்கும் இடையில் உள்ள எல்லைப் பகுதியான ராஃபாவில் இஸ்ரேலிய படைகள் தீவிர தாக்குதல்களை நடத்திவரும் பின்புலத்தில் இன்று புதன்கிழமை காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் நோக்கில், கெரெம் ஷாலோம் எல்லையை இஸ்ரேல் திறந்துள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தை மற்றும்... Read more »

அமெரிக்காவில் 3 வயது மகனை சுட்டுக்கொன்று, தாய் தற்கொலை

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்தவர் 32 வயதான சவான்னா கிரிகர். இவரது மகன் மூன்று வயதான கெய்தன். தனது மகனுடன் வசித்து வந்த கிரிகர், சான் ஆன்டனியோ பகுதியிலுள்ள ஒரு பூங்காவுக்கு சென்று, அங்கு தனது மகனை சுட்டுக்கொன்று விட்டு, தானும் தற்கொலை... Read more »

ஸெலன்ஸ்கியை கொல்ல சதி: பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் கைது

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலன்ஸ்கியையும் அந்நாட்டு உயரதிகாரிகளையும் கொல்வதற்குச் சதி செய்ததாகக் கூறி, உக்ரைன் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக ‘ஏஎஃப்பி’ செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் சதித் திட்டத்தில் ரஷ்யாவிற்குப் பங்கிருப்பதாக உக்ரேன் அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ரஷ்ய அரசுப் பாதுகாப்புத் துறை வகுத்த திட்டத்தைச்... Read more »

இஸ்ரேலின் கோரிக்கையை ஏற்ற ஹமாஸ்: போர் நிறைவுக்கு வருகிறதா?

காசாவிலிருந்து இஸ்ரேல் பாதுகாப்பு படையினரை வெளியேற்றுவதற்கு பதிலாக சிறைப்பிடிக்கப்பட்ட பணயக்கைதிகள் விடுவிப்பதற்கான இஸ்ரேலின் கோரிக்கையை ஹமாஸ் ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஆரம்பமான இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தற்போது வரை நீடித்து வருகின்றது. ஹமாஸால் இஸ்ரேலியர்கள் பலர் பணயக் கைதிகளாாக சிறைப்பிடிக்கப்பட்டனர். எவ்வாறாயினும் போர்நிறுத்த... Read more »

ஈராக்கில் தூக்கிலிடப்பட்ட பயங்கரவாதிகள்

ஈராக்கில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட 11 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். ஈராக் நசிரியாவில் உள்ள சிறையில் அவர்கள் நேற்று (07) திங்கட்கிழமை தூக்கிலிடப்பட்டுள்ளனர். பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக அறிவித்து குறித்த 11 பேருக்கும் கடந்த மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நசிரியாவில்... Read more »

தென்னாப்பிரிக்காவில் இடிந்து வீழ்ந்த கட்டிடம்: இடிபாடுகளுக்குள் சிக்குண்ட 48 தொழிலாளர்கள்

தென்னாப்பிரிக்காவின் கடலோர நகரமான ஜோர்ஜ் நகரில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தொடர் மாடி கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்ததில் 48 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்குண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்களில் 22 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது பலர் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டுள்ளதுடன்... Read more »