பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி காயப்படுத்திய ஆசிரியர் உட்பட இருவர் கைது !

கம்பஹா, பியகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சியம்பலாபே பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றிற்கு அருகில் பாடசாலை அதிபர் ஒருவரை ஜீப் வாகனத்தில் கடத்திச் சென்று வீடொன்றில் அடைத்து வைத்து, தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் ஆசிரியர் உட்பட இருவர் நேற்று வெள்ளிக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளதாக... Read more »

ஐ.சி.சி. தொடரிலிருந்து பாகிஸ்தான் கிரிக்கட் வீரர் சைம் ஐயூப் விலகல்

பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சைம் ஐயூப், ஐ.சி.சி. சம்பியன் கிண்ண கிரிக்கட் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவரது காலில் ஏற்பட்டுள்ள உபாதையிலிருந்து அவர் மீண்டு வருவதற்கு சுமார் 10 வாரங்கள்வரை செல்லும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் தென்னாபிரிக்க... Read more »
Ad Widget

பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்புக்கு மீண்டும் தடை

பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதாக பிபா (FIFA) அறிவித்துள்ளது. பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு நிர்வாகத்தில் குளறுபடிகள் இருப்பதால் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. நிர்வாகிகள் இடையே மோதல்கள், மோசமான நிர்வாக நடைமுறை உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு... Read more »

டொனால்ட் ட்ரம்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை

USAID என்ற சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் 2,200 பணியாளர்களை கட்டாய விடுமுறையில் அனுப்பும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் திட்டத்தை அமெரிக்க நீதிமன்றம் ஒன்று தற்காலிகமாக தடுத்துள்ளது. இரண்டு தொழிற்சங்கங்கள் முன்வைத்த மனுவொன்றுக்கு அமைய இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின்... Read more »

STF கட்டளை அதிகாரி வருண ஜயசுந்தர; அஜித் ரோஹண இடமாற்றம் – பொலிஸ் முக்கிய பதவிகளில் இடமாற்றம்

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) சட்டத்தரணி வருண ஜயசுந்தர, கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான SDIG அஜித் ரோஹண உள்ளிட்ட பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்... Read more »

இறக்குமதி வாகனங்களை ஏற்றிவரும் கப்பல் இம்மாத இறுதியில் நாட்டிற்கு

எதிர்வரும் 25ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களைத் தாங்கிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் சகல வாகனங்களும் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் என அந்த சங்கத்தின் தலைவர்... Read more »

உப்பு நெருக்கடி இன்னும் மோசமடியும் நிலை?

சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவால் உரிமங்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக உப்பு இறக்குமதி மேலும் தாமதமாகும் என்று உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது நாட்டின் உப்புப் பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கும் என்று அதன் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்தார். உப்பு... Read more »

சட்ட மா அதிபர் மீது அரசியல் அழுத்தம் பிரயோகிக்கக் கூடாது : இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

சட்ட மா அதிபரின் பரிந்துரைகள் மீது அரசியல் ரீதியான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சட்ட மா அதிபரின் பரிந்துரைகள் தொடர்பில் அமைச்சரவையோ அரசியல் தலைமைகளோ தலையீடு செய்யக் கூடாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் சட்டத்தின்... Read more »

மனைவி , மகளை கூரிய ஆயுதத்தால் தாக்கிய கணவன் – மனைவி உயிரிழப்பு

புத்தளம் ஹஸ்திபுர பகுதியில் தந்தை ஒருவர் தனது மகள் மற்றும் மனைவியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (7) நண்பகல் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் காயமடைந்த இருவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் புத்தளம், கல்லடி பகுதியைச்... Read more »

தண்டப்பணம் விதிப்பால் மேலதிக பாகங்களை உடைத்து வீசிய முச்சக்கர வண்டி சாரதி

வவுனியாவில் க்ளீன் சிறிலங்கா திட்டத்தில் முச்சக்கர வண்டி சாரதிக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டதால், அதிருப்தியடைந்த அவர், தனது வாகனத்தின் மேலதிக பாகங்களை தனது காலால் உதைந்து உடைத்து எறிந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவமானது நேற்று (07) வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. இலங்கை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ‘கிளீன்... Read more »