இலங்கை வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நியமனம்

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நியமனம்

​இலங்கை வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண்கள் பிரதி பொலிஸ்மா அதிபர்களாக (DIG) நியமிக்கப்படவுள்ளனர்.

​2025 ஜனவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் இந்த நியமனங்களுக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இறுதி ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.

 

​புதிதாக நியமிக்கப்பட்டுள்ள DIG-க்கள் தர்ஷிகா குமாரி, பத்மினி வீரசூரிய, ரேணுகா ஜயசுந்தர மற்றும் நிஷாணி செனவிரத்ன ஆவர். இவர்களில் மூவர் 1997 ஆம் ஆண்டு ஒரு வருட தகுதிகாண் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக பொலிஸ் சேவையில் இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin