காலி துறைமுகத்தில் படகுகளுக்கு தீ: 4 படகுகள் சேதம்

காலி துறைமுகத்தில் படகுகளுக்கு தீ: 4 படகுகள் சேதம்

காலி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல படகுகளில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

காலி மாநகர சபை தீயணைப்புப் பிரிவு, கடற்படை, காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மற்றும் மீனவ சமூகத்தினரின் ஒன்றிணைந்த முயற்சியால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

காவல்துறையின் கூற்றுப்படி, துறைமுக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நான்கு படகுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

சம்பவம் குறித்து காலி துறைமுக காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Recommended For You

About the Author: admin