அரை காற்சட்டையுடன் வீதியில் தேசப்பிரிய

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தனது இல்லத்திற்கு முன்பாக அவர் தனிமனித போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளும் அவரது இல்லத்திற்கு முன்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

வேட்புமனுத் தாக்கல் செய்து தேர்தலை தாமதப்படுத்துவது எதேச்சாதிகாரத்துக்குச் சமமானது. அரசாங்கத்தின் செல்வாக்கு காரணமாகவே உள்ளூராட்சித் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது என தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தவிர்த்து அதிகாரிகள் ஆட்சி புரிவது மக்களின் உரிமைகளை மீறும் செயல் என பதாதையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அம்பலாங்கொட-படபொல வீதியில் பயணிக்கும் மக்கள் இந்த பதாதைகளை பார்வையிட்டு செல்வதையும் அவதானிக்க முடிந்தது.

பலர் மஹிந்த தேசப்பிரியவின் போராட்டத்துக்கு ஆதரவையும் வழங்கியுள்ளனர்.

Recommended For You

About the Author: admin