ஜனாதிபதி எடுத்துள்ள முடிவு!

கடந்த 8ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட 37 இராஜாங்க அமைச்சுக்களுக்கு தனியாக வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனால் அமைச்சுக்களுக்காக செயலாளர்களை நியமிக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசாங்க அமைச்சுக்களின் எல்லைக்குள் வரும் செயற்பாடுகளை ஒருங்கிணைக்க அமைச்சரவை அமைச்சின் சிரேஷ்ட மேலதிக செயலாளரை ஈடுபடுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், மக்கள் மீதான சுமையை குறைக்கும் அரசாங்கத்தின் மேலும் ஒரு நடவடிக்கை என ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

எனவே வாகனங்கள் உட்பட பல செயலக சிறப்புரிமைகளுக்கான செலவை அரசாங்க அமைச்சுக்கள் ஏற்க வேண்டியதில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அமைச்சரவை அமைச்சின் ஊழியர் தேவைகளை அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் ஊடாக பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் புதிய பதவிகளை உருவாக்குவதற்கான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதியின் செயலாளர் செப்டம்பர் 09 ஆம் திகதி அனைத்து செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார்.

எனினும் புதிய ராஜாங்க அமைச்சர்கள் தமக்கான அதிசொகுசு வாகனங்களையும் ஏனைய சலுகைகளையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஒவ்வொரு ராஜாங்க அமைச்சர்களுக்கும் தலா எட்டு வாகனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor