எல்லை மீறி மீன்பிடித்தால் ‘படகுகளை கொளுத்துவோம்’

“எல்லை தாண்டிவரும் மீனவர்களின் படகுகளைக் கொளுத்துவோம்“ என இலங்கை மீனவர்கள் தெரிவித்துள்ள கருத்தானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை – இந்திய மீன்பிடி பிரச்சினையானது விடுதலைப் போராட்டம் ஆயுத ரீதியாக மௌனித்த பின்னர் பாரிய சவாலாக காணப்படுகின்றது.

வங்கக்கடலில் மீன் பிடிக்கப் போகும் தமிழக மீனவர்கள், எல்லை கடந்து மீன்பிடிக்க வருவதாக தெரிவித்து, இலங்கை கடற்படை தொடர்ந்து அவர்களை கைது செய்து வருகிறது.

கடந்த பெப்ரவரி 04ஆம் திகதி இரண்டு விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கச் சென்ற 23 இராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கச்சத்தீவு திருவிழா புறக்கணிப்பு

இந்திய மீனவர்களின் படகுகளையும் நாட்டுடைமையாக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே இலங்கை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைக் கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும், மீனவர்கள் கைது காரணமாகக் கச்சத்தீவு திருவிழாவையும் புறக்கணிக்கவும் தமிழக மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல, பெருமைமிக்க இந்தியர்கள் என்ற முதல்வர் ஸ்டாலின், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இலங்கை மீனவர்கள்,

எந்த காரணம் கொண்டும் இந்த மதம் சார்ந்த நிகழ்வைப் புறக்கணிப்பதைக் காரணமாகச் சொல்லி விடுதலை செய்யச் சொல்வதை ஏற்கவே முடியாது. இலங்கை கடற்படை சட்டப்பூர்வமான முறையில் தான் அவர்களை கைது செய்துள்ளனர். எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட காரணமாகவே மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர்களை எக்காரணம் கொண்டும் விடுதலை செய்யப்படமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எல்லை மீறும் மீனவர்களை கைது செய்யாவிட்டால் நாங்களே கடலுக்குள் சென்று படகுகளை எரிக்க வேண்டி இருக்கும். இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வருவதைத் தடுக்க வலியுறுத்தி வரும் 20ஆம் திகதி இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட இருக்கிறோம்.

சம்மந்தப்பட்ட மீனவர்களை இந்திய அதிகாரிகள் நிறுத்தவில்லை என்றால் மிகப் பெரியளவில் போராட்டம் வெடிக்கும்” என்றனர்.

மீனவர் பிரச்சினை உருவானதன் பின்னணி என்ன?

1921 ஆம் ஆண்டு இந்­திய – இலங்கை பிரிட்டிஷ் அதி­கா­ரிகள் ஒரு மீன்­பிடி ஒப்­பந்தம் செய்து கொண்­டார்கள். அதன்­படி, இந்­திய பகுதியில் அதி­க­மாக மீன­வர்கள் உள்­ளதால் பாக்கு நீரிணையில் அவர்­க­ளுக்கு அதிக கடல்­ப­கு­தியும், இலங்­கையில் குறை­வான மீன­வர்கள் உள்­ளதால் அவர்களுக்கு பாக்கு நீரிணையில் குறை­வான கடல் பகு­தியும் பிரிக்­கப்­பட்­டது.

அதன்­படி இந்­தி­யா­வுக்கு கச்­சத்­தீவு உள்­ளிட்ட 28 கடல் மைல் பகு­தி­களும் இலங்­கைக்கு நெடுந்­தீவு உள்­ளிட்ட 12 கடல் மைல் கடல் பகு­தி­களும் பிரிக்­கப்­பட்­டன.

ஆனால், 1974இல் கச்­சத்­தீவு இலங்­கைக்கு வழங்­கப்­பட்­டதால் தமது பாரம்­ப­ரிய மீன்­பிடி பகு­திகள் பறி­போ­ன­தாக இந்­திய மீன­வர்கள் தெரி­விக்­கின்­றனர்.

இதனால் இந்­திய மீன­வர்கள் பயன்­ப­டுத்தி வந்த 500 சதுர கி.மீ. கடல் இலங்கை வச­மா­ன­தா­கவும் ஆனாலும் 1974 கச்­சத்­தீவு ஒப்பந்தத்தின் 6ஆம் சரத்­துப்­படி இந்த 500 சதுர கி.மீ. பரப்­ப­ளவில் இரு நாட்டு மீன­வர்­களும் மீன்­பி­டிக்க உரி­மை­யுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் பாக்கு நீரிணை (பாக் ஜல­சந்தி) கடல் பகு­தி­களில் இந்­திய மீன­வர்கள் இழு­வைப்­ப­டகில் இழு­வ­லையை பயன்­ப­டுத்தி மீன்­பி­டிப்­பதால், இந்­திய, இலங்கை மீன­வர்­க­ளி­டையே பிரச்சினைகள் ஏற்­ப­டு­கின்­றன.

இந்த பிரச்­சி­னைக்­கான தீர்வே தசாப்­தங்கள் கடந்தும் இழு­ப­றி­யி­லுள்­ளது. பாக்கு நீரிணை கடல்­ப­கு­தியில் இந்­திய மீன­வர்கள் இழுவை வலையைப் பயன்­ப­டுத்த கூடாது என இலங்கை மீன­வர்கள் கூறு­கின்­றனர். இந்­திய மீன­வர்கள் தரப்பில் இதற்­கான மாற்று வழியைக் கேட்­கின்­றனர்.

அதே­ச­மயம் செவிள் வலையைப் பயன்­ப­டுத்தி மீன்­பி­டிக்க தடையில்லை என இலங்கை மீன­வர்கள் தரப்பில் கூறப்­ப­டு­கி­றது.

இதேவேளை, இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 27 மீனவர்கள் மற்றும் அவர்களது 5 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அண்மையில் கடிதம் எழுதி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

2023 ஜன­வரி முதல் ஆகஸ்ட் வரை கைது செய்­யப்­பட்ட இந்­திய மீன­வர்கள் எண்ணிக்கை வருமாறு…

மார்ச் 28 , ஜூன் 31 , ஜூலை 24 ,ஆகஸ்ட் 10 , செம்டெம்பர் 22 , ஒக்டோபர் 50ற்கும் அதிகமான மீனவர்கள் பதிவாகிய மாதமாக கருதப்படுகின்றது.

நிரந்தர தீர்வு கோரி மத்திய அரசின் ஆதரவை கோரும் மீனவர்கள்

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை தமிழ் நாட்டின் கடற்றொழிலாளர்களின் தலைவர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இதன்போது, இலங்கை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட இழுவை படகுகளின் எண்ணிக்கை குறித்தும் வெளிவிவகார அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களின் தொடர் அத்துமீறல் காரணமாக வடக்கு மீனவர்கள் வெகுவாக பாதிப்படைந்துவரும் நிலையில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin