பிரான்சில் குடியேறும் வெளிநாட்டவர்கள் மீது மிக கடுமையான சட்டங்கள் கொண்ட குடிவரவு சட்ட சீர்திருத்தம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது.
’இறுக்கமான சட்டம்’ என தெரிவிக்கப்படும் இந்த புதிய திருத்தத்தம் குறித்த பல அச்சம் மக்களிடையே பரவி வருகிறது.
குறிப்பாக வெளிநாட்டவர்கள் பிரான்சில் குடியமர்த்தப்பட மாட்டார்கள் என கருத்துகள் பரவி வருகிறது.
இந்த புதிய சட்டமானது வெளிநாட்டு குடியேறிகளை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. அதேவேளை அச்சுறுத்தலான வெளிநாட்டவர்களை நாட்டை விட்டு வெளியேற்றவும் இந்த சட்டம் பணிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.