இறந்த பின் தங்க நகைகளுடன் புதைக்கப்பட்ட பணக்கார பெண்!

ருமேனியாவில் உள்ள கல்லறையில் 6,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெரும் கோடீஸ்வர பெண்ணின் சடலத்துடன் 169 தங்க மோதிரங்கள், வளையல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தான் இதை கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் உடல் எலும்புகளாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் அடக்கம் செய்யப்பட்ட போது உடன் இந்த நகைகள் சேர்ந்து புதைக்கப்பட்டதாக அருங்காட்சியக இயக்குனர் கேப்ரியல் மொய்சா கூறியுள்ளார்.

மிகப்பெரும் பணக்கார பெண்
மிகப்பெரும் பணக்கார பெண்ணின் புதைகுழியுடன் நகைகள் வைக்கப்பட்டிருந்தன என்று அருங்காட்சியக இயக்குனர் கேப்ரியல் மொய்சா சுட்டிக்காட்டியுள்ளார்.

எலும்புக்கூட்டின் அளவு மற்றும் ஆயுதங்கள் ஏதுமின்றி புதைக்கப்பட்டிருப்பதன் அடிப்படையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த எச்சங்கள் ஒரு பெண்ணுடையது என அடையாளம் கண்டுள்ளனர்.

எலும்புக்கூடு அவள் உயரமாகவும், நன்கு ஊட்டப்பட்டவளாகவும் இருந்ததைக் குறிக்கிறது, மேலும் அவளுடைய பற்களின் நல்ல நிலை அவள் உயரடுக்கு அந்தஸ்தை அனுபவித்தது என்பதற்கான கூடுதல் ஆதாரத்தை வழங்கியுள்ளது.

டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள எலும்புகள்
இந்த கண்டுபிடிப்புகளை ஒரு “அற்புதமான கண்டுபிடிப்பு” என முன்னணி தொல்பொருள் ஆய்வாளர் கெலின் கெமிஸ் கூறுகிறார். இதுபோன்ற புதையல் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இனி கிடைக்க வாய்ப்பில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோடிகள் மதிப்புடைய பொக்கிஷங்களுடன் புதைக்கப்பட்ட பெண்ணைப் பற்றி மேலும் அறிய ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர். எலும்புகள் டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

அந்த பெண் எந்த வகையான கலாச்சாரத்தைச் சேர்ந்தவர் என்பதையும், மோதிரங்கள் திரான்சில்வேனியன் தீவுக்கூட்டத்திலிருந்து தங்கத்தால் செய்யப்பட்டதா என்பதையும் நாங்கள் கண்டுபிடிக்க விரும்புகிறோம்” என்று மொய்சா மேலும் கூறினார்.

Recommended For You

About the Author: webeditor