கிரிக்கெட் தெரிவுக்குழு இன்று கூடுகிறது

உபுல் தரங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு இன்று (18) கூடவுள்ளது.

இதன்போது, இலங்கை கிரிக்கெட் அணி தொடர்பில் சில புதிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உபுல் தரங்க தலைமையிலான புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவானது, ஜனவரி 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இலங்கை-சிம்பாப்வே தொடருக்கான இலங்கை அணியை தெரிவுசெய்வதற்காக பிரதானமாக கூடும் என கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், 3 விதமான போட்டிகளுக்கான அணித்தலைமை குறித்து அங்கு விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Recommended For You

About the Author: admin