உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி இலங்கை பொலிஸ் தலைமையகத்திற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி இலங்கை பொலிஸ் தலைமையகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நீதிக்கான கட்சி சார்பாற்ற மக்கள் ஒன்றியம் தலைமையில் இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கவனயீர்ப்பு போராட்டம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
2019, 21 ஏப்ரல் அன்று, மூன்று தேவாலயங்கள் (கடுவாப்பிட்டி புனித செபஸ்டியன் தேவாலயம், கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், மற்றும் மட்டக்களப்பில் உள்ள சியோன் தேவாலயம்) மற்றும் கொழும்பில் மூன்று சொகுசு ஹோட்டல்கள் (சினமன் கிராண்ட், தி கிங்ஸ்பரி மற்றும் தி. ஷங்ரி-லா) தொடர்ச்சியான ஒருங்கிணைந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு உள்ளாகின.

267 பேர் உயிரிழப்பு
அத்துடன் , தெமட்டகொடையில் உள்ள ஒரு வீடு மற்றும் தெஹிவளையில் உள்ள தங்குமிடம் ஆகியவற்றில் மேலும் இரண்டு குண்டு வெடிப்புகள் இடம்பெற்றன.

இந்த குண்டுவெடிப்புகளில் குறைந்தது 45 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 267 பேர் கொல்லப்பட்டனர், குறைந்தது 500 பேர் காயமடைந்தனர்.

தாக்குதல்களில் ஈடுபட்ட எட்டு தற்கொலை குண்டுதாரிகளும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர்.

Recommended For You

About the Author: webeditor