தனுஷ்க குணதிலக்கவிற்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தடை!

தனுஷ்க குணதிலக்க தொடர்பான சம்பவம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கும் வரை அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளையும் தடை செய்யுமாறு சட்டமா அதிபர் தமக்கு பரிந்துரைத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் அறிக்கை தடயவியல் தணிக்கைக்காக கணக்காய்வாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தனுஷ்க குணதிலக்க கடந்த ஆண்டு நவம்பர் 6 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அவர் கடுமையான எச்சரிக்கைகள் மற்றும் பிணையில் சிட்னி நீதிமன்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்.

Recommended For You

About the Author: webeditor