இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி!

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் சுற்றுத்தொடரை வெள்ளையடிப்பு செய்து இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணியித்த 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 390 ஓட்டங்களை பெற்றது.

391 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 22 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 73 ஓட்டங்களை மட்டும் எடுத்தது. இதன்மூலம் 317 ஓட்டங்களால் இலங்கை அணி படுதோல்வி அடைந்தது.

இந்த தோல்வியின் மூலம் மோசமான சாதனையை இலங்கை பதிவு செய்துள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் 300ற்கும் மேலான ஓட்டங்களால் வெற்றி பெற்ற முதல் அணியாக இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்னர் 2008ஆம் ஆண்டு நெதர்லாந்து அணிக்கு எதிராக 290 ஓட்டங்களால் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றமை சாதனையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor