பதவியில் இருந்து நீக்கியது பழிவாங்கும் செயல்

அரசுக்கு ஆரம்பத்தில் இருந்து பில்லியன் கணக்கில் இலாபத்தை பெற்றுக்கொடுத்த பாராளுமன்ற வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள் தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து தன்னை நீக்கியது பழிவாங்கும் செயல் என பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய குடியரசு கட்சியின் தலைவருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். சாராய... Read more »

ஜோ பைடனின் நினைவாற்றல் குறித்து விமர்சனங்கள் முன்வைப்பு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் வயது மற்றும் அவரது நினைவாற்றல் தொடர்பான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகார ராஜாங்க செயலாளர்... Read more »
Ad Widget Ad Widget

தேர்தலுக்கு 20 பில்லியன் ரூபா நிதி தேவை

ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் ஆகியவற்றுக்கு சுமார் 20 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக தாம் ஏற்கனவே நாடாளுமன்றத்திற்கும் நிதியமைச்சிற்கும் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம்... Read more »

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது: மறுக்கும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பணத்திற்காக அரசாங்கத்திற்கு எதிராக அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் முதன் முறையாக... Read more »

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் விடுதலை

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஏழு பேர் நாடு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்கள் 8 பேர், கத்தாரில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.... Read more »

இந்தியா அழைத்ததால் அதிர்ச்சியடைந்துள்ள சிங்கள அரசியல் தலைவர்கள்

இந்தியாவுக்குச் சென்று கலந்துரையாடியமையால் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் அச்சமடைந்திருப்பதாக ஜே.வி.பி. எனப்படும் எங்கள் மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நேற்று ஞாயிறுக்கிழமை இடம்பெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றிய அவர் தமது இந்திய பயணம் தொடர்பில் ஆதரவாளர்களுக்கு... Read more »

தென் கொரியாவை ஆத்திரமூட்டும் வடகொரியா

தென்கொரியாவை முக்கிய எதிரியாக அறிவித்துள்ள வடகொரியா, தொடர் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்படுகிறது. வடகொரியா அண்மையில் பல ரொக்கெட் லோஞ்சர்களை பரீட்சித்து பார்த்தது. அதில் 240 மில்லி மீட்டர் பாலிஸ்டிக் ரொக்கெட் லோஞ்சர் ஷெல்கள் வெற்றிகரமாக இலக்கு நோக்கி செலுத்தப்பட்டுள்ளது. ரொக்கெட்... Read more »

ரணிலுக்கு கட்சியே இல்லை! எந்த சின்னத்தில் போட்டியிடுவார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கட்சியே இல்லாத நிலையில், எந்தக் கட்சியில் தேர்தல் போட்டியிடப்போகின்றார் என்று வசந்த சமரசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். ஜே.வி.பி எனப்படும் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள்... Read more »

சஜித் அணியிலிருந்து சரத் பொன்சேகா விலகல்?

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் அறிவிப்பொன்றை பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா விரைவில் வௌியிடுவார் என்று அறியமுடிகின்றது. எதிர்வரும் வாரத்திற்குள் அவர் அது தொடர்பான அறிவிப்பை வௌியிடுவார் என்று நம்பகமாக தெரிகிறது. முன்னாள் இராணுவத் தளபதி... Read more »

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம்!

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் உத்தேச திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இன்றைய தினம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது இதனால், திருத்தப்பட்ட சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தலில் வௌியிடப்பட்டதன் பின்னர், திருத்தப்பட்ட சட்டமூலம் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்தச் சட்டத்தின் பல பிரிவுகள்... Read more »