இன்றைய ராசிபலன் 30.12.2022

மேஷம் மேஷம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வரப்படும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாக பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. நிதானம் தேவைப்படும் நாள். ரிஷபம்... Read more »

இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு 20,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிப்பு!

இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனம் 20,000 அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளது. உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. Read more »
Ad Widget Ad Widget

யாழில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் என உப பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார். இதன் போது 5,000 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.... Read more »

அமெரிக்காவை தாக்கியுள்ள வெடிகுண்டு சூறாவளியால் 60 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவை தாக்கியுள்ள வெடிகுண்டு சூறாவளி (Bomb Cyclone) என்று அழைக்கப்படும் பனிப்புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இடைவிடாது பனி பொழிவதால், வீதிகளில் பல அடி உயரத்திற்கு பனி குவிந்துள்ளது. இந்நிலையில் அவற்றை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டாலும், தொடர்ந்தும் பனிப்பொழிவு ஏற்படுவதால்,... Read more »

மீண்டும் பல நாடுகளை அச்சுறுத்தும் கொரொனோ!

சீனாவில் பரவி வரும் பி.எஃப்.7 வைரஸ் ஜெர்மனி உட்பட உலக நாடுகளை மீண்டும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன், ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் கொரோனா அலை வராமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள்... Read more »

யாழில் அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை ஊசி மூலம் எடுத்துக் கொண்ட இளைஞன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திக்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த இளைஞனுடன் போதைப்பொருளை உட்செலுத்திக்கொண்ட மூவரை பொலிஸார் தேடி வரும் நிலையில் அவர்கள் தலைமறைவாகியுள்ளனர். யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் இளைஞனொருவரை , திடீர்... Read more »

தலீபான் அரசுக்கு எச்சரிக்கை விடுத்த ஐ .நா!

பெண்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதையடுத்து ஆப்கானிஸ்தானில் சில உதவித் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. பெண் உதவிப் பணியாளர்களுக்கு தலீபான் தலைமையிலான நிர்வாகம் தடை விதித்துள்ளதால் பல நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட வேண்டியிருக்கும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த... Read more »

ஸஹ்ரான் ஹாசிமுடன் நேரடி தொடர்பை பேணி வந்த நபர் ஒருவர் கைது!

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலின் பிரதான சந்தேகநபரான ஸஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பில் இருந்த ஒருவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை இந்திய தேசிய புலனாய்வு முகமையினர் நேற்று (28) கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி... Read more »

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள நடிகை சமந்தா

நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் மயோடிசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அண்மையில் வீடு திரும்பினார். பின்னர் யஷோதா திரைப்பட... Read more »

யாழில் இடம்பெற இருக்கும் இலங்கையின் 75 ஆவது சுதந்திரதின கொண்டாட்டம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்குபற்றுதலுடன் தேசிய ரீதியிலான 75 ஆவது சுதந்திரதின கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மூன்று முக்கியமான நிகழ்வுகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும்... Read more »