யாழில் காணி மோசடியில் ஈடுபட்ட நொத்தாரிசு ஒருவர் கைது!

காணியை மோசடியாக விற்பனை செய்வதற்காகப் போலியான கையெழுத்திட்டு உறுதி தயாரித்த குற்றச்சாட்டில் யாழ். புத்தூரைச் சேர்ந்த நொத்தாரிசு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விசாந்த தலைமையிலான விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது இவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி... Read more »

யாழ் மாவட்டத்தில் நாளை முதல் முன்னேடுக்கப்பட இருக்கும் விசேட வேலைத்திட்டம்!

யாழ்.மாவட்டத்தில் வீதி விபத்துகளை தடுக்க நாளை முதல் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார் யாழ் குடாநாட்டில் அதிகரித்துள்ள விதி விபத்துக்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் மே மாதம் மாத்திரம்... Read more »
Ad Widget

சேக்கிழார் சுவாமிகள் குருபூசையும் மணவாளக் கோலத்திருவிழாவும்

யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி மாசேரி திருவருள்மிகு புராதன குருநாதர் கோவில் ஸ்ரீலஸ்ரீ குருநாத நாகப்பசுவாமி சித்தர்பீடம் நடத்தும் வருடாந்த மணவாளக் கோலத்திருவிழாவும், சேக்கிழார் சுவாமிகள் குருபூசையும் நாளை 31.05.2023 புதன்கிழமை இரவு 7 மணிக்கு சிவநெறிப் பிரகாசகர், சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில்... Read more »

யாழ் வியாபர நிலையம் ஒன்றில் இடம்பெற்ற மோசடி அம்பலம்

அச்சுவேலியில் உள்ள பல வியாபார மையங்களில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்கள் திடீர் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். குறித்த திடீர் பரிசோதனை நடவடிக்கை இன்றைய தினம் (29-05-2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, வியாபாரிகளினால் பயன்படுத்தப்பட்ட நிறுக்கும் கருவிகளை பரிசோதித்த... Read more »

இனி ஒரு நிமிடங்கூட தமிழ்த் தேசிய அரசியலில் நீடிக்கத் தகுதியற்றவர் விக்கி

இனி ஒரு நிமிடங்கூட தமிழ்த் தேசிய அரசியலில் நீடிக்கத் தகுதியற்றவர் சி. வி. விக்னேஸ்வரன் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்துள்ளார். இனப்படுகொலை செய்த இராணுவத்திற்கும் விடுதலைக்காகப் போராடிய தமிழ் மக்களுக்கும் ஒரே இடத்தில் அஞ்சலி என்பதை ஏற்க... Read more »

யாழில் மாணவிகளை தாக்கிய ஆசிரியருக்கு நேர்ந்த கதி!

யாழ். மகாஜன பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாக நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலையில் மூன்று மாணவர்களை திடீரென குறித்த ஆசிரியர் தாக்கிய... Read more »

யாழில் சிறைச்சாலை கூரைக்கு மேலேறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதி!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் கூரைக்கு மேலேறி சிறைக் கைதி ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அத்தோடு நேற்று பகல் வேளையில் ஆரம்பித்த குறித்த நபரின் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணம் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்கு தன்னை மாற்றுமாறு கோரியே... Read more »

யாழ் அச்சுவேலி பகுதியில் கப்ரக வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழப்பு!

அச்சுவேலி, வல்லை பருத்தித்துறை பிரதான வீதியில் நேற்றைய தினம் கப் ரக வாகனம் மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது வீட்டு சுற்றுப்புறத்தை சுத்தம் செய்துகொண்டிருந்த தருனத்தில் வீதியில் பயணித்த கப் ரக வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து குறித்த நபர் மீது மோதியுள்ளது.... Read more »

யாழ் கொடிகாமம் மிருசுவில் பகுதியில் ஆறு வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்

கொடிகாமம், மிருசுவிலில் 6 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. ரி.கின்சிகா என்ற சிறுமியே இவ்வாறு வீட்டு கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியை நேற்று மாலை 3 மணி முதல் காணவில்லையென தேடியபோது, 4 மணியளவில் கிணற்றுக்குள்... Read more »

யாழில் பல்கலை மாணவியை ஏமாற்றி திருமணம் செய்து வைக்க முயன்ற கலியாணப் புறோக்கர்

யாழ் பல்கலைக்கழகத்தில் கற்கும் 22 வயதான மாணவிக்கு 31 வயது லண்டன் மாப்பிளை என கலியாணப் புறோக்கர் ஒருவர் ஏமாற்றி திருமணம் செய்து வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அத்துடன் மாப்பிளையின் பெற்றோர் இறந்துவிட்டதாகவும் மாப்பிளை லண்டனில் பெரிய பணக்காரனாக உள்ளதாக கூறி மாப்பிளையின்... Read more »