கஜேந்திரகுமார் MP யின் வீட்டின் முன் பிக்கு குழு போராட்டம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது கொழும்பு இராணி வீதியிலுள்ள வீட்டிற்கு  முன்பாக இனவாதிகள் சிலர் இன்றையதினம் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதன்போது அவர்கள் இனவெறிக்கூச்சலிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. பிக்குவுடன் வந்த சிலரே இவ்வாறு குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.... Read more »

தமிழ் நீதிபதிக்கு அச்சுறுத்தல்: சரத் வீரசேகரவை கைது செய்யக்கோரி தம்பிராசா உண்ணாவிரதம்

நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையீடு செய்து நீதிபதிக்கு அச்சறுத்தல் விடுக்கும் சரத் வீரசேகரவை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நீதித்துறையின் சுதந்திரத்திக்கு அச்சுறுத்தல்... Read more »
Ad Widget

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை அங்கீகரித்த அமெரிக்காவிற்கு ஊடக பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் நன்றி 

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை அங்கீகரித்த அமெரிக்காவிற்கு ஊடக பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் நன்றி தெரிவிப்பு. தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை நோக்கி செல்வதற்கு 13 ஆவது திருத்தச்சட்டம் வழிவகுக்கும் என அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ள கருத்தை ஈழ மக்கள் ஜனநாயகக்... Read more »

இனவாதிகளுக்கு சுதந்திரம் வழங்கிய ஜனாதிபதி

அரகலவை கட்டுப்படுத்திய ஜனாதிபதி இனவாதிகளுக்கு ஏன் சுதந்திரம் வழங்கியுள்ளார் ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ் இலங்கை வரலாற்றில் தென்னிலங்கையில் மக்களின் அறவழிப் போராட்டத்தால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய துரத்தப்பட்ட பின்னர் அரகல தரப்பு ஏனையோரையும் விரட்ட தீவிரம் பெற்ற போது பதில்... Read more »

குமுதினி படகு சேவைகள் ஆரம்பம்!

நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமான குமுதினிப் படகு சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இன்று வியாழக்கிழமை (24) முதல் மீண்டும் பயணிகள் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குமுதினிப் படகு பழுதடைந்த நிலையில் திருத்த வேலைகளின் பின்னர் குறிகாட்டுவானில் தரித்துவிடப்பட்டிருந்தது. நெடுந்தீவு பயணித்த... Read more »

‘சிறுபொறி’ பத்திரிகை மீண்டும் வெளியீடு

47 ஆண்டுகளின் பின் கையெழுத்துப் பத்திரிகையாக இருந்த ‘சிறுபொறி’ மீண்டும் பாடசாலை மாணவருக்கான சஞ்சிகையாக வெளி வர இருக்கிறது. கே.ஏ.எஸ் சத்தியமனை நூலகம் KAS Sathiamanai Library – ஐ அண்மித்த வலி மேற்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 19 பாடசாலைகள் பங்குபெற்ற ஓவியப்போட்டியில்... Read more »

யாழில்14 வயது சிறுவன் பரிதாப மரணம்

யாழில் டிப்பர் வாகனமும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதி கொற்றாவத்தையில் இன்று (24) மதியம் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 14 வயதான சிறுவன் எரிந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில்... Read more »

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து விபத்திற்குள்ளனது!

யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பஸ் நீர்கொழும்பில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்று (24) அதிகாலை 4:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. வெளிநாடு செல்வதற்காக 35 பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பஸ் ஒன்றே... Read more »

யோகக்கலை கற்கைநெறியின் புதிய பிரிவு ஆரம்பம்

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடத்தப்பட்டுவருகின்ற யோகக்கலை அடிப்படை  கற்கைநெறியின் புதிய பிரிவு நல்லூர்க் கந்தன் ஆலய பின்வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் 23.09.2023 சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.... Read more »

ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு வன்னி ஹோப்பினால் மருந்துகள் கையளிப்பு

ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு வன்னி ஹோப்பினால் மருந்துகள் கையளிப்பு இன்றையதினம் (24.8.2023) வைத்தியர் வாணி பிறேம்ஜித் ( USA ) என்பவரின் நிதிப்பங்களிப்பு உதவியுடன், தொண்டு நிறுவனமாகிய வன்னி ஹோப் நிறுவனத்தினால் யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்கு அத்தியாவசிய மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த... Read more »