நாமல் குமார கைது!

சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று (01) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு பேராயர் கர்தினால் ரஞ்சித்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் ஒலிப்பதிவினை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கு அமைவாக இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.... Read more »

இலங்கையில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி

இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதம் கணிசமான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதம் 350,000 இலிருந்து 250,000 ஆக குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அது மாத்திரமின்றி புற்றுநோய்,... Read more »
Ad Widget

2024ல் அதிகளவானோர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளனர்

இலங்கை வரலாற்றில் அதிகளவானோர் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்ற ஆண்டாக 2024ம் ஆண்டு பதிவாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி, 2024ம்ஆண்டில் 312,836 பேர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் அதில் 185,162 ஆண் தொழிலாளர்களும் 127,674 பெண் தொழிலாளர்களும் தொழில் நிமித்தம் வௌிநாடு... Read more »

உள்நாட்டு டயர் விலையை குறைக்க உற்பத்தியாளர்கள் இணக்கம்

உள்நாட்டு டயர் ஒன்றின் விலையை கணிசமான அளவில் குறைப்பதற்கு உள்ளூர் டயர் உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். உள்நாட்டு டயர் உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் வர்த்தக அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர்கள் இந்த இணக்கத்தை வெளிப்படுத்தியதாக அமைச்சர்... Read more »

இலங்கை சுங்கத்துறையிடமிருந்து சாதனைமிக்க வருமானப் பதிவு

இலங்கை சுங்கத்துறை கடந்த வருடம் 1.5 டிரில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி கடந்த வருடம் 1.515 டிரில்லியன் ரூபா வருமானம் பதிவாகியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்தார். இது ஒரு வருடத்தில்... Read more »

பாகங்களை இணைத்து சட்டவிரோதமாக வாகனங்களை அசெம்பிள் செய்துவந்த நபர் 5 கோடி பெறுமதியான வாகனங்களுடன் கைது.!

பாகங்களை இணைத்து சட்டவிரோதமாக வாகனங்களை அசெம்பிள் செய்துவந்த நபர் 5 கோடி பெறுமதியான வாகனங்களுடன் கைது.! சட்டவிரோதமான முறையில் வாகனங்களை அசெம்பிள் செய்துவந்த கும்பலொன்றை குற்றப் புலனாய்வு பிரிவினர் மடக்கிப் பிடித்துள்ளனர். இந்த மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் மாத்தளை பிரதேசத்தில் வைத்து குற்றப்... Read more »

புத்தாண்டு வாழ்த்து செய்தி

2025ம் ஆண்டு நம்பிக்கை நிறைந்த ஆண்டாகத் திகழட்டும் மலையக மக்களின் தேவைகளிலும், அவர்களது முயற்சிகளிலும் நாம் கைகொடுப்போம். இ.தொ.கா. பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் புத்தாண்டு வாழ்த்து செய்தி. பிறக்கின்ற ஒவ்வொரு புத்தாண்டும் மாற்றங்களையும். முன்னேற்றங்களையும் தரவேண்டும் என்ற... Read more »

நாடும் நாட்டு மக்களும் பல தசாப்த காலமாகக் கண்ட நல்ல கனவுகள் நனவாகும்

அனைத்து மக்களும் ஒன்றிணைந்த அபிவிருத்தியடைந்த இலங்கை பற்றிய கனவை நனவாக்கும் வாய்ப்பு உங்களுக்கும் எமக்கும் கிடைத்துள்ளது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில், நாடும் நாட்டு மக்களும் பல... Read more »

“க்ளீன் ஶ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

புதிய வருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கவுள்ள முதல் நாளான இன்று (01) அனைத்து அரச நிறுவனங்களிலும் உத்தியோகபூர்வ வைபவம் இடம்பெறவுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின் செயலாளரின் ஊடாக சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டு, அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள்,... Read more »

நமது நாட்டின் தற்போதைய சவால்களை சரியாக அடையாளம் கண்டு எதிர்காலத்தை வலுப்படுத்துவோம்

தாய்நாடு தற்போது எதிர்நோக்கி வரும் சவால்களை வெற்றிகொள்வதற்கு அனைவரும் துணிச்சலுடனும், வலிமையுடனும், தொலைநோக்குப் பார்வையுடனும் உழைக்க உறுதியேற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். கடந்த காலத்தைப் போன்று குறுகிய இன மற்றும் மதக் கருத்தியல்களுக்கு... Read more »