அழகை இழக்கின்றதா நுவரெலியா? : கண்டவாறு நிர்மாணிக்கப்படும் கட்டிடங்கள்

நுவரெலியா மாநகர சபை எல்லைக்குள் இடம்பெறும் சட்டவிரோத கட்டிட நிர்மாணங்களுக்கு எதிராக சட்டம் முறையாக அமுல்படுத்தப்படவில்லை என எதிர்க்கட்சி நகரசபை உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆளும் தரப்பைச் சேர்ந்த சில நகரசபை உறுப்பினர்களின் தலையீடுகள் மற்றும் சில அதிகாரிகளின் முறைகேடுகள் காரணமாக சட்டவிரோத நிர்மாணங்களுக்கு... Read more »

அழிந்து போகும் வாகனங்கள்: பெறுமதி கோடிக்கணக்கில்- என்ன நடக்கின்றது?

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தகவல்களின்படி, இறக்குமதியாளர்களால் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சுமார் ஆயிரம் சொகுசு மோட்டார் வாகனங்கள், துறைமுகத்தில் விதிக்கப்படும் அதிகளவான தாமதக் கட்டணத்தை (Demurrage Charges) செலுத்த முடியாத காரணத்தால், ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்திலேயே அகற்றப்படாமல் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீண்ட காலமாக அங்கு நிறுத்தி... Read more »
Ad Widget

SLS தரச்சான்றிதழ் முத்திரையற்ற சுகாதாரத் துவாய்களுக்கு ஒக்டோபர் 8 முதல் தடை!

SLS தரச்சான்றிதழ் முத்திரை இல்லாத, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பெண்களுக்கான சுகாதாரத் துவாய்களை உற்பத்தி செய்தல், பொதியிடல், விநியோகித்தல், எடுத்துச்செல்லல், களஞ்சியப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவை எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி முதல் தடைசெய்யப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.... Read more »

வெற்றிலைப்பாக்குடன் புகையிலை விற்பனைக்கு தடை – விதிமீறினால் சிறை அல்லது அபராதம்!

இலங்கையில் வெற்றிலைப்பாக்குடன் சேர்த்து புகையிலை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக இனி கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண எச்சரித்துள்ளார். 2006ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் மீதான அதிகாரசபைச் சட்டம்... Read more »

சவக்கார விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு: நுகர்வோர் அதிகாரசபையின் புதிய விசேட வர்த்தமானி!

இலங்கையில் விற்பனை செய்யப்படும் சவக்கார உற்பத்திகளுக்கான கட்டாய பெயரிடல் தேவைகள் அடங்கிய புதிய விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் அனைவருக்கும் பொருந்தும். இதன்படி, உற்பத்தியின் பெயர் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய... Read more »

பொதுப் போக்குவரத்து சாரதிகளுக்கு போதைப்பொருள் பரிசோதனை தீவிரம்

பொதுப் போக்குவரத்தை தரமான மற்றும் பாதுகாப்பானதாக உருவாக்கும் முதன்மை நோக்கத்துடன், பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளை நோக்காகக் கொண்டு , நச்சுப் போதைப்பொருட்களைக் கண்டறியும் விசேட சோதனைத் திட்டங்கள், தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் முதன்மைப் பங்களிப்புடன் அண்மைய நாட்களாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. போக்குவரத்து,... Read more »

பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் எம்.பி ஜகத் மனுகவர்ணவுக்கு பிடியாணை!

பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் எம்.பி ஜகத் மனுகவர்ணவுக்கு பிடியாணை! – நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 2022ஆம் ஆண்டு ‘அரகலய’ மக்கள் போராட்டங்கள் தொடர்பான இரண்டு வெவ்வேறு வழக்குகள் நிமித்தம் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய குற்றச்சாட்டின் கீழ், பிரதி அமைச்சர் எரங்க குணசேகர... Read more »

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்

இலங்கையின் முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்ன துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் தமக்குத் தாமே துப்பாக்கிச் சூடு நடத்தி தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். 1986 இல்... Read more »

சீனாவின் உயரிய கௌரவம் பெற்ற இலங்கையர்

சீனாவின் உயரிய கௌரவம் பெற்ற இலங்கையர் – வரலாற்றுச் சிறப்புமிக்க அங்கீகாரம்! இலங்கை – சீன சமூக மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு சங்கத்தின் தலைவர் இந்திரானந்த அபேசேகர அவர்கள், வெளிநாடுகளுடனான நட்புறவிற்கான யுன்னான் மக்கள் சங்கத்தின் முதல் கவுன்சிலின் கௌரவ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.  ... Read more »

பாலியல் தொல்லை கொடுத்த மற்றுமோர் பொலிஸ் காவலர் கைது

பெண் பொலிஸ் ஒருவரின் மடியில் அமர்ந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மற்றுமோர் பொலிஸ் காவலர் கைது இசை நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவரின் மடியில் அமர்ந்து அந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மற்றுமோர் காவலர்... Read more »