பிரித்தானிய தேர்தலில் மாபெரும் வெற்றிப் பெற்ற தொழிற்கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். தொழிலாளர் கட்சித் தலைவர் நேர்மறையான ஒத்துழைப்பை எதிர்நோக்குவதாகவும் அவர் கூறியுள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். “இங்கிலாந்து பொதுத்... Read more »
இந்தியாவின், மத்தியப் பிரதேசத்தில் கடந்த மூன்று வருடங்களில் மட்டும் சுமார் 31,000க்கும் அதிகமான பெண்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு நாளில் 28 பெண்களும் 3 சிறுமிகளும் காணாமல் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் மாத்திரம் 676 பெண்கள் காணாமல்... Read more »
மோடி குறித்து கிண்டல், சபாநாயகர் மீது விமர்சனம்: மக்களவையில் ராகுல் காந்தியின் கவனம் ஈர்த்த கருத்துகள் மக்களவைத் தேர்தலின் பின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி முதல்முறையாக பேசிய கருத்துகள் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.... Read more »
இந்தியாவில் தயாரிக்கப்படும் 52 மருந்து வகைகள் தரமற்றவை என மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் (CDSCO) நடத்திய ஆய்விலிருந்து கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் 50 மருந்துகள், காய்ச்சல் மருந்து,வயிற்றுப் பிரச்சினைக்கான மருந்து மற்றும் ஆன்டிபயோடிக் மருந்துகள் போன்றவையும் உள்ளடங்குகின்றன. அதுமட்டுமின்றி,... Read more »
இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஜூலை மாதம் ரஷ்யா செல்ல உள்ளார். 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விளாடிவோஸ்டோக்கில் நடைபெற்ற கிழக்குப் பொருளாதார மன்றத்தில் மாநாட்டில் கலந்துகொள்ளவே மோடி, கடைசி ரஷ்யாவுக்குச் சென்றிருந்தார். இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாகவும் மோடி பதவியேற்றிருந்தபோது ரஷ்ய... Read more »
இந்தியாவின் டெல்லி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 13 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்தனர். உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இந்த சிறுவன் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கள் கிழமை, துபாய் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக... Read more »
இந்தியாவின் கேரளா மாநிலத்தை கேரளம் என்று அழைப்பதற்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்த நிலையில் அந்த தீர்மானம் அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் மற்றும் கருவூல பெஞ்ச்கள் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதால் ஏகமனதாக இந்த... Read more »
தமிழகத்தின் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் அருந்திய நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது. மேலும், பலர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க சிஐடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். “கள்ளக்குறிச்சியில் கலப்பட சாராயம் குடித்து... Read more »
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வருகின்றார். இலங்கை விஜயத்தின்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இருதரப்பு பங்குடைமையின் பரந்தளவான விடயங்கள் குறித்து இலங்கை தலைமைத்துவத்துடன் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அரசின் கீழ்... Read more »
இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் நாளைமறுதினம் வியாழக்கிழக்கிழமை இரண்டுநாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். இவரது பயணத்துக்கான ஏற்பாடுகள் பாதுகாப்புடன் செய்யப்பட்டுள்ளதாக புதுடில்லி அறிவித்துள்ளதுடன், இலங்கையில் எஸ்.ஜெய்சங்கர் செல்லும் இடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் எஸ்.ஜெய்சங்கர் திருகோணமலைக்கும்... Read more »

