சீனாவின் சுமார் 45 போர் விமானங்கள், தைவான் எல்லையை மீறி அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தைவானின் புதிய ஜனாதிபதி பதவியேற்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் சீனாவின் அத்துமீறலை தைவான் கண்டித்துள்ளது. இது குறித்து தைவான் பாதுகாப்பு அமைச்சு... Read more »
சுமார் 40,000 பங்கேற்பாளர்கள், உலகின் மிகப்பெரிய திரைப்பட நட்சத்திரங்களின் வருகையுடன் 2024 ஆம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழா ஆரம்பமாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை (14) ஆரம்பமான கேன்ஸ் திரைப்பட விழா எதிர்வரும் 25 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டியின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு... Read more »
பிரித்தானியாவின் டெர்பி நகரில் அமைந்துள்ள பிரதான ஹோட்டல் ஒன்று அண்மையில் அதன் உரிமையை மாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த ஹோட்டலை தற்போது இலங்கை நிறுவனம் ஒன்று பொறுப்பேற்றுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெடிகம குழுமத்தின் துணை நிறுவனமான லாவென்டிஷ் லீஷர் ரஷ்மி தெடிகம மற்றும்... Read more »
நியூ கலிடோனியாவில் அரசியலமைப்பு சீர்திருத்ததிற்கு எதிராக சுதந்திர ஆதரவாளர்களினால் இடம்பெற்ற போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. தேர்தல்களின் போது அதிகளவான பிரான்ஸ் குடியிருப்பாளர்களை வாக்களிக்க அனுமதிக்கும் அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்படுவதற்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தமானது கனாக்கு எனப்படும் பழங்குடி மக்களின் வாக்குகளை... Read more »
இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மூன்று விமானங்களை இயக்கும் திறன் கொண்ட விமானிகள் தங்கள் இராணுவத்தில் இல்லை என மாலைத்தீவு அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. தலைநகர் மாலேயில் நேற்று (12) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய பாதுகாப்பு அமைச்சர் கசான் மௌமூன் இதனை தெரிவித்துள்ளார். இதன்படி... Read more »
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு எதிரான யுத்தம் சுமார் 2 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சரான ஷெர்கி ஷோய் பதவி நீக்கம் செய்யப்பட்டு புதிய... Read more »
காசாவில் ஹமாஸுக்கு எதிரான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்களை ரஃபா நகரிலிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. அல்-மவாசியில் விரிவாக்கப்பட்ட மனிதாபிமான பகுதி என்று அழைக்கும் பகுதிக்கு செல்லுமாறு இஸ்ரேல் இன்று சனிக்கிழமை (11) உத்தரவிட்டுள்ளது. மத்திய காசாவில் பல பகுதிகளை இலக்கு வைத்து... Read more »
ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளம் காரணமாக 200 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாக்லான் மாகாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உயிரிழப்புகள் பதிவாகியதாக ஐக்கிய நாடுகள் சபை இன்று சனிக்கிழமை (11) தெரிவித்துள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாக என்று ஐ.நாவின் இடம்பெயர்வுக்கான சர்வதேச... Read more »
பாலஸ்தீனத்திற்கான முழு உறுப்புரிமை கோரிக்கை வெற்றிபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில், பாலஸ்தீனத்திற்கு நிரந்தர உறுப்புரிமை வழங்குவது குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை பரிசீலிக்கவேண்டும் என்ற தீர்மானக் கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகள் வாக்களித்துள்ளன.... Read more »
உக்ரைன் – ரஷ்ய போரில் மேலும் 14 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் ஓய்வுப்பெற்ற படைவீரர்கள் உக்ரைன் – ரஷ்ய போரில் கூலிப்படையாக செயற்படுவதாக கடந்த காலங்களில் செய்திகள்... Read more »

