யாழில் சமுர்த்தி உத்தியோகஸ்தர் என கூறி திருட்டில் ஈடுபட்ட நபர் கைது!

யாழில், சமூர்த்தி உத்தியோகஸ்தர் எனக் கூறி திருட்டில் ஈடுபட்டுவந்த நபர் ஒருவரை பொலிஸார் நேற்றைய தினம் கைதுசெய்துள்ளனர். குறித்த நபர் யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் திருட்டில் ஈடுபட்டுவந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். தங்க நகைகள் நகைகள் உடமைகள் கொள்ளை ஆள் நடமாட்டம்... Read more »

யாழில் போதைப் பொருளுடன் மாநகரசபை ஊழியர் கைது!

யாழ். பேருந்து நிலையத்தில் வைத்து கொழும்பு மாநகர சபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இன்று (07.09.2023) காலை குறித்த கைது நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர். மேலதிக விசாரணை... Read more »
Ad Widget

நல்லூர் ஆலயத்தில் மோசமான செயலில் ஈடுபட்ட நபர்

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய திருவிழாவில் பெண் ஒருவரின் கைபேசியை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று புதன்கிழமை குறித்த நபர் கைதாகியுள்ளார். நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழாவுக்கு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை வருகை தந்த பெண் அடியவர் ஒருவர் ஆலயத்தின்... Read more »

இலங்கை இந்திய பயணிகள் கப்பல் போக்குவரத்திற்கான அனுமதி மறுப்பு

தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு, மத்திய நீர்வழி போக்குவரத்து அமைச்சு அனுமதி தர மறுத்துள்ளது. தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசந்துறைக்கு, விரைவில் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அதற்கு மாநில அரசின் ஒத்துழைப்புடன், மத்திய கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து... Read more »

யானை தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு!

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் பகுதியில் யானை தாக்கியதில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் தோப்பூர் -பட்டித்திடல் பகுதியைச் சேர்ந்த முருகுப்பிள்ளை ராசலிங்கம் (69 வயது) என தெரிய வந்துள்ளது. யானை தாக்குதல் வீட்டை அண்மித்த பகுதியில் தோட்ட பயிர் செய்கையில்... Read more »

250 ரூபாவுக்கு எரிபொருள் வழங்க கோப் குழு உத்தரவு

நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டால் 250 ரூபாவுக்கு எரிபொருள் வழங்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் தெரிவித்த கருத்து பொய்யானது என பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவில் தெரியவந்துள்ளது. பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று (06.09.2023) பொது வர்த்தக... Read more »

யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் நீதிகோரி போராட்டம்!

யாழ். போதனா வைத்தியசாலையில் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி வைத்தியசாலை முன்றில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சமூக மட்ட சிவில் அமைப்பினரால் இன்று (07.09.2023) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தாதியரின் அசமந்தப் போக்கு மேலும் தெரியவருகையில், கடந்த வாரம்... Read more »

கொழும்பு வாகன உரிமையாளர்களுக்கான எச்சரிக்கை!

கொழும்பில் வாகன உதிரிப்பாகங்கள் களவாடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு நகரில் உள்ள வாகன தரிப்பிடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களின் கண்ணாடி உள்ளிட்ட உதிரிபாகங்கள் களவாடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் போக்குவரத்து திட்டமிடல்... Read more »

விபத்தில் உயிரிழந்த யாழ் மாணவனின் சாதனை

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மாணவனுக்கு, உயிரியல் பிரிவில் 2ஏ , பி பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. யாழ்ப்பாணம் துன்னாலை மத்தியை சேர்ந்த சங்கர் சஞ்சீவி எனும் மாணவன் உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கற்று , உயர்தர பரீட்சை எழுதி விட்டு , பெறுபேறுக்காக காத்த்திருந்த... Read more »

வெளிநாடு செல்லும் குடும்பங்களுக்கு அமுல்படுத்தப்படும் புதிய திட்டம்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தில் முழுமையான திருத்தங்களை மேற்கொள்ளும் பணிகளை முன்னெடுத்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார தெரிவித்துள்ளார். அத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடுகளுக்கு செல்வோரின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் ஒன்றை வழங்கும் திட்டத்தையும்... Read more »