பாடசாலை இடம்பெறும் நாட்களின் எண்ணிக்கையில் திருத்தம்

2025 ஆம் ஆண்டில் பாடசாலை இடம்பெறும் நாட்களின் எண்ணிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் வருடத்திற்கு 210 நாட்களுக்கு பாடசாலைகளை நடாத்தினாலும் அடுத்த வருடத்தில் அதன் எண்ணிக்கையை 181 நாட்களாக குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதிகளவிலான அரசு விடுமுறைகளுடன் முதல் தவணை தொடங்குவதில்... Read more »

நெதன்யாகுவுக்கு புரோஸ்டேட் விரிவாக்கத்தால் சிறுநீர் பாதை தொற்று !

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு நேற்று நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புரோஸ்டேட் அகற்றும் அறுவை சிகிச்சை செய்து கொண்டு நெதன்யாகு தற்போது நல்ல நிலையில் இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. “பிரதமர் மயக்க நிலையில் இருந்து எழுந்து... Read more »
Ad Widget

ஓய்வூதியம் செலுத்தும் திகதிகள் அறிவிப்பு

அடுத்த ஆண்டு ஓய்வூதியம் வழங்கும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸின் கையொப்பத்தின் கீழ் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் இருந்து இது குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனவரி, பெப்ரவரி, மார்ச், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களுக்கான ஓய்வூதியத்தை வரும் 10ம் திகதி வழங்க... Read more »

‘சட்டவிரோத மதத் தலங்களுக்கு அனுமதியில்லை’

“கடந்த ஆட்சிகள் போல் இந்த ஆட்சியில் சட்டவிரோத மதத் தலங்களுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது” என்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “கடந்த அரசுகள் போல் இந்த... Read more »

வீட்டுக்குள் புகுந்த மலைப் பாம்பு

தென்மராட்சி மீசாலை வேம்பிராய் பகுதியில், குடிமனைக்குள் புகுந்த வெங்கணாந்தி இனத்தைச் சேர்ந்த மலைப் பாம்பு ஒன்றை பிரதேச மக்கள் உயிருடன் பிடித்துள்ளனர். 8 அடி நீளமான இந்த பாம்பு கடந்த 27 ஆம் திகதி இரவு வீட்டு வளாகத்துக்குள் புகுந்துள்ளது. குட்டி வெங்கணாந்தி இன... Read more »

மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிணக்குகளை உடனடியாக தீருங்கள்

மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிணக்குகளை உடனடியாக தீருங்கள் – மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை..!! மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று... Read more »

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 87 வருட சாதனை முறியடிப்பு!

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) நடைபெற்று முடிந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியை பார்வையிட வந்த ரசிகர்களின் மொத்த எண்ணிக்கையானது திங்களன்று (30) புதிய சாதனையை எட்டியது. அதன்படி, மெல்போர்னில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா இடையேயான 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியின் மோதலை காண 350,000... Read more »

இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை தன்வசப்படுத்திய நியூஸிலாந்து

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணியானது 45 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2:0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை... Read more »

வீடுகளில் ஜன்னல் வைக்கத் தடை

ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டு தலிபான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பெண்கள் ஆரம்ப கல்வி கற்கவும், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது. சமீபத்தில் பெண்கள் பொது இடங்களில் பாடுவதற்கும், கவிதைகள் வாசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதன்... Read more »

உலகின் அதிவேக ரயிலை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது

உலகின் அதிவேக ரயிலின் முன்மாதிரியை சீனா நேற்று (29) பெய்ஜிங்கில் அறிமுகம் செய்திருந்தது. CR450 என்ற எண்ணைக் கொண்ட ரயிலின் இயங்கும் வேகம், ஆற்றல் திறன், பெட்டிகளில் சத்தம் மற்றும் பிரேக்கிங் தூரம் போன்ற முக்கிய குறிகாட்டிகள் சர்வதேச தரத்தின் கீழ் முன்னணியில் இருப்பதாகத்... Read more »