ஐ.பி.எல் தொடரிலிருந்து முதலாவது அணியாக வெளியேறிய சிஎஸ்கே

நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து முதல் அணியாக சென்னை அணி வெளியேறியுள்ளது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்ற நிலையில், பிளே ஓப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை அந்த அணி இழந்துள்ளது. இந்தியன் ப்ரீமியர் லீக்... Read more »

அல் நாசரை வீழ்த்தியது கவாசாகி – ரொனால்டோ ரசிகர்களுக்கு ஏமாற்றம்

ஆசியன் சம்பியன்ஸ் லீக்கின் அரையிறுதிப் போட்டியில் அல் நாசர், ஜப்பானிய கழகமான கவாசாகி ஃபிரான்டேலிடம் தோல்வியடைந்தது. நேற்று இடம்பெற்ற இந்தப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் அல் நாசர் அணி தோல்வியடைந்தது. இதன் மூலம், அல் நாசரின் சம்பியன்ஸ் லீக் இறுதிக் கனவுகள்... Read more »
Ad Widget

யாழில் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த 40 ஏக்கர் காணி விடுவிப்பு

யாழ்ப்பாணத்தில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்து ஒரு தொகுதி காணிகள் இன்று (01) உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மானத ஜெகம்பத் யாழ். மாவட்ட செயலர் ம.பிரதீபனிடம் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள், செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.... Read more »

தமிழகம் – யாழ்ப்பாணம் கப்பல் சேவை!!! கட்டணம் குறைப்பு

தமிழகம் நாகப்பட்டினம் மற்றும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு இடையிலான கப்பல் சேவை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் சேவையை முன்னெடுத்துள்ள சுபம் நிறுவனத்தின் தலைவர் சுந்தர்ராஜன் இதனை தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.... Read more »

ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் அசோக ஆரியவன்ச, காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உடன் அமுலுக்கு... Read more »

டூரிஸ்ட் பேமிலி – விமர்சனம்

கதைக்களம் இலங்கையில் ஏற்பட்ட வறுமை காரணமாக சசிகுமார், தனது மனைவி சிம்ரன் மற்றும் இரண்டு மகன்களுடன் பிழைப்பு தேடி யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து கள்ளத்தோணி வழியாக ராமேஸ்வரம் வருகின்றனர். அங்கிருந்து கார் மூலம் சென்னையில் இருக்கும் சிம்ரன் சகோதரர் யோகி பாபுவிடம் தஞ்சம் அடைகின்றனர்.... Read more »

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த தொலைபேசிகளும் குறைப்பு

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நான்கு தொலைபேசிகளில் மூன்று தொலைபேசிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஒரு முன்னாள் ஜனாதிபதி தற்போது ஒரு தொலைபேசியை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணியாளர் ஒருவரிடம்... Read more »

பேருந்து கட்டணத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லை

எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும், பேருந்து கட்டணத்தில் எவ்வித மாற்றங்களும் இருக்காது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,... Read more »

திபெத் புனித தலங்களை பார்வையிட இந்தியர்களுக்கு சீனா அழைப்பு

திபெத்தில் உள்ள புத்த மத மற்றும் இந்து மத புனித தலங்களை பார்வையிட இந்திய யாத்தீரிகர்கள் வரலாம் என சீன வெளியுறவுத்துறை அழைப்பு விடுத்துள்ளது. கரோனா தொற்று பரவியதாலும், எல்லையில் நடந்த மோதல் காரணமாக இந்தியா – சீனா இடையே உறவுகள் பாதித்ததாலும் கடந்த... Read more »

பாகிஸ்தானுக்கு எதிரான தனது வான்வெளியை மூடுகிறது இந்தியா

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சமீபத்தில் 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானுக்கான தனது வான்வெளியை இந்தியா மூடியுள்ளது. கடந்த வாரம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த கடுமையான அரசியல் முடிவுகளைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.... Read more »