யாழில் அந்தியோட்டி கிரிகைக்காக சென்று நகையை பறி கொடுத்த பெண்!

யாழில் உறவினர் வீடொன்றில் அந்தியோட்டி கிரிகைக்காக சென்றிருந்த பெண்ணை தாக்கி 5 பவுண் சங்கிலியை வழிப்பறி கொள்ளையர்கள் அறுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் வட்டுக்கோட்டை இந்துக்கல்லுாரிக்கு அருகில் நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் சித்தங்கேணியில் உள்ள உறவினரின் வீட்டு அந்தியேட்டி கிரியைகளில் கலந்துகொள்வதற்காக பேருந்தில்... Read more »

பாவனைக்கு உதவாத 5,670 கிலோ மீன்கள் மீட்பு!

நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் மனித பாவனைக்கு உதவாத 5,670 கிலோ மீன்களை ஏற்றிச் சென்ற ஒருவர் லொறியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.​​ சிலாபத்தில் இருந்து நீர்கொழும்பு நோக்கி துர்நாற்றம் கொண்ட மீன்களை ஏற்றிச் சென்ற லொறி தோப்புவ பாலத்தில் வைத்து நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. லொறியை பொலிஸார்... Read more »

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகியவர்களின் பதவி பறிப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் 13 பேரும் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். புதியவர்கள் நியமனம் அத்துடன்... Read more »

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை!

நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வட மேல் மற்றும் வடக்கு மாகாணங்களின் சில பிரதேசங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. பலத்த மழை காரணமாக தெதுரு ஓயா மற்றும் குக்குலே கங்க ஆகியவற்றின் வான் கதவுகள்... Read more »

கைக்குழந்தையை வீதியில் விட்டு தப்பிச் சென்ற நபர்

பதுளையில் கைக்குழந்தையை அனாதை இல்லத்திற்கு அருகே கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பண்டாரவளை அம்பேகொட சிறிசங்கபோ சிறுவர் இல்லத்தின் வாகன தரிப்பிடத்தில் குறித்த குழந்தை கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் நிலையத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்... Read more »

கணவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்ப்பட சோகம்!

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் குறித்த பல்கலைக்கழக மாணவி உயிரிழந்திருந்தார். பல்கலைக்கழக மாணவி தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது வாகனமொன்றுடன் மோதுண்டு ஸ்தலத்தில் மரணமடைந்திருந்ததுடன் சம்பவ இடத்தில் காயமடைந்த... Read more »

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) அமைப்பாளராக மைத்ரியின் மகன் நியமிக்கப்பட்டுள்ளார்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் (Maithripala Sirisena) புதல்வர் தஹாம் சிறிசேனவுக்கு முக்கிய பதவிக்கு வழங்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை – பத்தாஹிர தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தஹாம் சிறிசேன முன்னர் பொலன்னறுவை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர்... Read more »

விக்ரமின் கோப்ரா சிறு விமர்சனம்

சீயான் விக்ரம் நடிப்பில் மூன்று ஆண்டுகளுக்கு பின் திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் கோப்ரா. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என தொடர்ந்து இரு வெற்றிப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. செவன் ஸ்க்ரீன் லலித் தயாரித்து ரெட் ஜெயிண்ட் இப்படத்தை வெளியிட்டுள்ளது.... Read more »

நாட்டில் உணவிற்கான பணவீக்கம் அதிகரிப்பு!

இலங்கையில் உணவிற்கான பணவீக்கம் 93.7% வரை அதிகரித்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வௌியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையின் பிரகாரம், நாட்டின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பணவீக்கம் 64.3% ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் இதுவரை பதிவான விகிதங்களுடன் ஒப்பிடுகையில், பணவீக்கம் தற்போது பாரியளவில் அதிகரித்துள்ளது.... Read more »

அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்தவருக்கு ஏற்ப்பட்ட நிலை!

பலாங்கொடை நகரில் 4 வெள்ளை முட்டைகளை அதிகபட்ச சில்லறை விலையை விட 260 ரூபாய்க்கு விற்பனை செய்த விற்பனையாளர் ஒருவருக்கு ஐந்து இலட்சம் (500,000) ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பலாங்கொடை பதில் நீதவான் ஏ. ஆமி. எஸ். மெனிகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். நுகர்வோர்... Read more »