இந்திய இறக்குமதி உப்பு பொதிகளுக்கு நாட்டின் சட்டங்களை அமல்படுத்துமாறு கோரிக்கை

இந்திய இறக்குமதி உப்பு பொதிகளுக்கு நாட்டின் சட்டங்களை அமல்படுத்துமாறு கோரிக்கை

உள்நாட்டு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் (SLSPA), இறக்குமதி செய்யப்படும் இந்திய உப்பு பக்கெட்டுகளுக்கு நாட்டின் பொதியிடல் சட்டங்களை அமல்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. உள்ளூர் உப்பு உற்பத்தியை 2023 யால மற்றும் 2024 மகா பருவங்களில் மோசமான வானிலை கடுமையாகப் பாதித்ததால், ஆண்டுக்கான 185,000 மெட்ரிக் டன் தேசிய தேவையை பூர்த்தி செய்ய இறக்குமதியை நம்ப வேண்டியுள்ளது.

அதேவேளையில், கொழும்பு துறைமுகத்தில் 45 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 400 உப்பு கொள்கலன்களை (கண்டெய்னர்கள்) உடனடியாக விடுவிக்குமாறும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மதிப்பு 800 மில்லியன் எனவும், இதில் 11,200 மெட்ரிக் டன் உப்பு இருப்பதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin