இலங்கையின் சில மனித புதைகுழிகளும் மௌனிக்கப்படும் நீதியும்..!

இலங்கையின் சில மனித புதைகுழிகளும் மௌனிக்கப்படும் நீதியும்..!

இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் பல மத்திய மற்றும் தெற்கு பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமல் போன அதே காலப்பகுதியில், மனித புதைகுழிகள் ஒரே மாதிரியான மரணத்தின் நிலக்குறிகளாக இன்று வரை மண்ணிலிருந்து மேலே வரத்தொடங்கியுள்ளன.

இலங்கை முழுவதும் பரவலாகப் பதியப்பட்ட இந்த புதைகுழிகள், ஒரு நாட்டின் இராணுவ அதிகாரம் மற்றும் மனித உரிமை மீறல்களின் நேரடி சாட்சிகளாக இன்று வெளிப்படுகின்றன.

செம்மணி, மிருசுவில் (யாழ் மாவட்டம்)

கணேஷபுரம் (கிளிநொச்சி மாவட்டம்)

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு (முல்லைத்தீவு மாவட்டம்)

மன்னார், திருக்கேதீஸ்வரம் (மன்னார் மாவட்டம்)

இவை, உள்நாட்டுப் போர் நிகழ்ந்த போது மற்றும் அதன் பின்னணியில் பொதுமக்கள், போராளிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கூட ‘காணாமல் ஆக்கப்பட்டுள்ள’ இடங்களாக அறியப்படுகின்றன.

மத்திய மற்றும் மத்திய வடக்கு:

அங்கும்புர (கண்டி மாவட்டம்)

மாத்தளை (மாத்தளை மாவட்டம்)

இங்கு காணப்படும் புதைகுழிகள் 1980களில் இடம்பெற்ற அரசியல் அடக்குமுறைகளின் காலத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.

மேற்கு மற்றும் தென்மேற்கு:

நிகவரட்டிய (குருநாகல் மாவட்டம்)

வல்பிட்ட, மாவுகெல்லி, எஸ்ஸெல்ல, ஹொக்கந்தாரா (கம்பஹா மாவட்டம்)

பொல்கொடை ஏரி (கொழும்பு மாவட்டம்)

வில்பிட்ட, அகுரஸ்ஸ (மாத்தறை மாவட்டம்)

இவை 1988–1990 இல் இடம்பெற்ற கிளர்ச்சிக்காலத்தில் தொடர்ச்சியான காணாமல் ஆக்கங்கள், சிறை கொலைகள் போன்ற சம்பவங்களை நினைவுகூர்கின்றன.

கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகள்:

சூரியகந்த (ரத்னபுரி மாவட்டம்)

களுவாஞ்சிக்குடி (மட்டு மாவட்டம்)

இவ்விடங்களில், பெரும்பாலும் தமிழ் மக்களும் ஜேவிபி கிளர்ச்சியின் போது சிங்கள சமூக உறுப்பினர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தனை இடங்களில் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டும், இதுவரை அதற்குரிய முழுமையான நீதிமன்ற விசாரணைகள் நடைபெறவில்லை.

ஐநா மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து பார்வையாளர்களாகவே உள்ளன

இந்த புதைகுழிகள் வெறும் இறந்த உடல்களின் அடக்கம் அல்ல.

அவை தமக்கென உரிமை கோர முடியாத அந்த உடல்களுக்குப் பின்னால் உள்ள வாழ்க்கைகள், குடும்பங்கள், சத்தமில்லாத சத்தியங்கள், புறக்கணிக்கப்பட்ட நீதிக்கான போராட்டங்களின் சின்னங்களாகும்.

இந்த விடயங்களில் உண்மை வெளிவராமல் இருப்பது, ஒரு நாட்டின் ஒழுங்குமுறையான நாகரிக வளர்ச்சிக்கு தடையாகும்.

இந்த மனித புதைகுழிகள், மண்ணில் புதைந்ததாலும் மறக்கப்பட முடியாதவர்களாகும்.

Recommended For You

About the Author: admin