நாட்டில் இருக்கும் கள்ளன்களை அநுர குமார திஸாநாயக்க ஒருபோதும் பிடிக்க மாட்டார். பெரிய கள்ளனை பிடிக்கவும் முடியாது என்று சிவில் சமூக செயற்பாட்டாளர் ஷிராஸ் யூனுஸ் தெரிவித்தார்.
க்ளீன் ஸ்ரீ லங்கா என்ற திட்டத்தின் ஊடாக மக்களது வங்கிக் கணக்கில் மிஞ்சியிருக்கும் பணத்தினைத் தான் இந்த அநுர அரசாங்கம் க்ளீன் செய்து கொண்டிருக்கின்றது என்றும் அவர் விசனம் வெளியிட்டார்.
அத்துடன், உகண்டாவில் இருந்து கொண்டு வருவதாக கூறிய ராஜபக்சர்கள் பதுக்கி வைத்ததாகக் கூறப்படும் கோடிக்கணக்கான டொலர்களை அநுர தரப்பு மீளக் கொண்டு வந்துவிட்டனரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

