75 வருட சாபம், 225 திருடர்கள் போன்ற கோஷங்களை இனிமேல் முழங்க முடியாது

இந்த வருடம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் போட்டியிடும் மக்களுக்கு ஆதரவளிப்பேன் என்றும் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் மொத்த வாக்குகளில் 43% வாக்குகளை அநுர குமார திஸாநாயக்க பெற முடியாமல் போனாலும் கம்பஹா மாவட்டத்தில் 55% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றமையே தான் தேர்தலில் போட்டியிடாததற்கு காரணம் என முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டார்.

2019 ஆம் ஆண்டு கம்பஹா மாவட்டத்தில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ அதிகூடிய வாக்குகளைப் பெற்றதாகவும், திசைகாட்டிக்கு சென்றவர்களில் பெரும்பாலானோர் தனது முகாமைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கம்பஹா மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை இந்த முடிவு உறுதிப்படுத்துவதால், நாட்டை உருவாக்க திசைகாட்டிக்கு வாய்ப்பளிக்க இம்முறை போட்டியிடப் போவதில்லை என்றும், பின்னர் 75 வருட சாபம், 225 திருடர்கள் போன்ற கோஷங்களை இனிமேல் முழங்க முடியாது என்றும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரங்கள்

Recommended For You

About the Author: admin