மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ள தாதியர்கள்

தாதியர் சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சு முன்வராமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட அகில இலங்கை தாதியர் சங்கம் தீர்மானித்துள்ளது.

கொழும்பு பொது நூலகத்தில் இன்று (8) நடைபெற்ற விசேட கூட்டத்தில் இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எச்எம்எஸ்பி மடிவத்த இத் தகவலை தெரிவித்துள்ளார்.

மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்
எதிர்வரும் 12ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தாதியர் தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 47000 தாதியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு பதில் வழங்காமை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட தாதியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது, தாதியர் வெற்றிடங்கள் போன்ற பல பிரச்சினைகள் உள்ளன.

வங்கிக் கடன் தவணை அதிகரிப்பு, மின்கட்டண உயர்வு, நியாயமற்ற சம்பளக் குறைப்பு, இத்தகைய சூழ்நிலையில் பணிபுரியும் செவிலியர்களின் பதவி உயர்வு தாமதம் போன்ற காரணங்களால் அவர்களின் துன்பம் மேலும் அதிகரித்துள்ளது.

செவிலியர்கள் பற்றாக்குறையால் அப்பாவி நோயாளிகளும் அவதிப்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor