யாழ் நைனாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் இடம்பெற்ற அதிசயம்

யாழ்ப்பாணம் நைனாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மாசி மக உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை ஆலயவரலாற்றுடன் தொடர்புடைய கருடப்பறவை அம்மன் தீர்த்தமாடும் வேளை வானில் வட்டமிட்டு அம்மனை தரிசித்து சென்றது. இவ் வேளை இக்காட்சியினை பார்த்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் மெய் சிலிர்த்து போயினர் Read more »

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில், 150 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு இன்றையதினம் (05) கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கோப்பாய் பொலிஸாரால்... Read more »
Ad Widget

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை மேற்கு பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்

வட்டு மேற்கு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றின் தொலைத்தொடர்பு கோபுரத்தினை அமைப்பதற்கு, மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வலி. மேற்கு பிரதேச சபையின் செயலாளருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர். அந்த கடிதத்தின் பிரதியை விமானப்படை, பாதுகாப்பு அமைச்சு, சுற்றாடல் அதிகாரசபை, UDA, MOH, வடக்கு... Read more »

படைப்பாளுமை தாட்சாயணி (திருமதி பிரேமினி பொன்னம்பலம் – சங்கானை பிரதேச செயலர்) அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

படைப்பாளுமை தாட்சாயணி (திருமதி பிரேமினி பொன்னம்பலம் – சங்கானை பிரதேச செயலர்) அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றையதினம் தொல்புரம் மேற்கு சுழிபுரம் சத்தியமனை நூலகத்தில் நடைபெற்றது. நிகழ்வானது மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து சிறுவர்களின் கவிதைப் பா உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன. விழாவின்... Read more »

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற உலக உடற்பருமன் எதிர்ப்பு தினம்

உலக உடற்பருமன் எதிர்ப்பு தினம் நேற்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் றெமான்ஸால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தெல்லிப்பழை ஆதார வைத்திசாலை வெளிநோயாளர் பிரிவில் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இடம்பெறும் இந்த நிகழ்வில், உடற்பருமன்... Read more »

யாழிலுள்ள பொது மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை!

யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் குருதி வழங்கல் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், அந்த அதிகரிப்பிற்கு ஏற்ப குருதிக்கொடையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் இரத்த வங்கியில் அடிக்கடி இரத்தத்திற்கு தட்டுப்பாடு ஏற்படுகின்றது. இவ்வாறான நிலையில், நோயாளர்களுக்கு தேவையான குருதியை... Read more »

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்று இடம்பெற்றது

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்றையதினம் கல்லூரியின் மைதானத்தில் இடம்பெற்றது. மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. கல்லூரியின் பதில் அதிபர் திருமதி தி.வதனி அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வலி.... Read more »

தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரி – சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்குமிடையிலான 21 வது வீரர்களின் போர் ஆரம்பம்

தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரி – சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்குமிடையிலான 21 வது வீரர்களின் போர் துடுப்பாட்டச் சமர் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஸ்கந்தவரோதயாக் கல்லூரி முதலில் களத்தடுப்பில் ஈடுபடுகின்றது. தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி அணியை S.கஜித்தும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி... Read more »

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு காசோலை வழங்கி வைப்பு!

இன்றையதினம் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு 6 இலட்சத்து ஓராயிரம் ரூபா காசோலை வழங்கி வைக்கப்பட்டது. சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளையினர் ஊடாக கனடா சித்தங்கேணி ஒன்றியத்தினர் இந்த நிதி உதவியினை வழங்கினர். வைத்தியசாலையில் நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக இந்த உதவித் திட்டம்... Read more »

யாழில் இந்திய இழுவை படகுகள் அட்டகாசம்

யாழ்ப்பாணம் – சுழிபுரம் மேற்கு சவுக்கடி கடற்பரப்பில் நேற்றிரவு (01-03-2023) கடற்றொழிலுக்கு சென்ற மூன்று மீனவர்களின் வலைகள் நாசமாக்கப்பட்டுள்ளது. இந்திய இழுவை படகுகளால் சுமார் 12 இலட்சம் பெறுமதியான வலைகள் அறுத்து நாசம் செய்யப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு... Read more »