கண்ணோயால் பாதிக்கப்பட்டுள்ள யாழ் சிறைச்சாலைக் கைதிகள்!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கண் நோய் தொற்று அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிறைசாலையில் 100க்கும் அதிகமான கைதிகள் கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களைத் தனிமைப்படுத்தி நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன எனவும் சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more »

யாழில் இளம் பெண் கொலை!

யாழில் 23 வயதான இரண்டு பிள்ளைகளின் இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் யாழ் நாவற்குழி பகுதியில் இன்று (16) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட தாயார் சம்பவத்தில் நாவற்குழி ஐயனார் கோயிலடியில் வசிக்கும் அஜந்தன்... Read more »
Ad Widget

யாழ் பொலிஸ்மா அதிபருக்கு விவசாய அமைச்சர் விடுத்துள்ள பணிப்புரை

யாழில் உள்ள விவசாயிகளிடம் கப்பம் பெறும் குழுவை உடனடியாக கைது செய்யுமாறு யாழ் பொலிஸ்மா அதிபர்களுக்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்றையதினம் (15-10-2023) காலை நடைபெற்ற விசேட விவசாயக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சரிடம்... Read more »

யாழில் பொது வெளியில் பிறந்தநாள் கொண்டாடிய கும்பலுக்கு நேர்ந்த கதி

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, பிறந்தநாள் கொண்டாடிய கும்பலை சேர்ந்த இரண்டு கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மத்திய பஸ் நிலையத்திற்கு 50க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த 150க்கும் அதிகமான இளைஞர்கள் சமீபத்தில் ஒன்று கூடி... Read more »

“சைவ வாழ்வியலில் சக்தி வழிபாடு” சிறப்புச்சொற்பொழிவு

நீர்வேலியில் சுக்கிர வாரச் சிறப்புச்சொற்பொழிவு இடம்பெறவுள்ளது.   யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடாத்தும் வாராந்தச் சுக்கிரவாரச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் எதிர்வரும் 20.10.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிவநெறிப் பிரகாசர் , சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில்... Read more »

தமிழீழத்திற்கான மக்கள் ஆணை கிடைத்து 46 ஆண்டுகள்: சரத் வீரசேகரவுக்கு தெரியாதா? சபா குகதாஸ்

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, அமெரிக்க விசா கிடைக்காத நிலையில் நீதிபதி சரவணராஜா விவகாரத்திலும் ஆட்டம் கண்டு புலம்பியவர் தற்போது புதுக் கயிறு விடுவது போல தமிழர்கள் ஆயுத பலத்தால் கிடைக்காத தமிழீழத்தை 13 ஆம் திருத்தம் மூலம் பெற முட்படுகிறார்கள் என முட்டாள்... Read more »

யாழ் போதனா வைத்தியசாலையில் நிகழ்ந்த ஈவிரக்கமற்ற செயல்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் , நபர் ஒருவருடன் முரண்பட்டு அவரை மிக மோசமாக ஈவிரக்கமின்றி தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இரண்டு பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இணைந்து நபரை கீழே தள்ளி விழுத்தி ஈவிரக்கமின்றி தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதனா... Read more »

யாழில் குப்பைக்கு தீ வைத்த பெண் உயிரிழப்பு!

வீட்டில் குப்பை கொளுத்திய போது எதிர்பாராத வகையில் ஆடையில் பற்றி எரிந்த தீயினால் காயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ்., சங்கத்தானை, சாவகச்சேரியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான சுகந்தன் தயாபரி (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம்... Read more »

யாழில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் வைத்திருந்த 14 கடை உரிமையாளருக்கு வழக்கு

யாழில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த 14 கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இது குறித்து யாழ். மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் சுபோகரன் கருத்துத் தெரிவிக்கையில் ”உக்க முடியாத , 20 மைக்ரோனுக்கு... Read more »

யாழில் வாள்வெட்டு!

துன்னாலை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம் பெற்ற சம்பவம் துன்னாலை கிழக்குப் பகுதியில் நேற்று (13) பிற்பகல் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே பகுதியைச்... Read more »