ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெஸி நவல்னி மரணம்

ரஷ்யாவின் மிகமுக்கிய எதிர்க்கட்சித் தலைவர் அலெஸி நவல்னி சிறைச்சாலையில் உயிரிந்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி விளடிமீர் புட்டினுக்கு சிம்சொப்பனமாக விளங்கிய அலெஸி நவல்னி மீது, ஊழலுக்கு எதிரான தனது அறக்கட்டளை மூலமாக பணத்தை முறைகேடாகக் கையாண்டதாகத் தெரிவித்து கடந்த 2013ஆம் ஆண்டு வழக்குத்... Read more »

இடைத்தேர்தல்களில் படுதோல்வி – மக்கள் செல்வாக்கை இழந்துள்ளாரா?

பிரித்தானியாவில் நடைபெற்ற இரண்டு இடைத்தேர்தல்களில் எதிர்க்கட்சியான தொழில் கட்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. வெலிங்பரோ மற்றும் கிங்ஸ்வுட் ஆகிய இடங்களில் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டன. குறித்த இரண்டு தொகுதிகளிலும் கன்சர்வேடிவ் கட்சியே கடந்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்தது. பொதுத் தேர்தலின் பின்னர் நாடாளுமன்றத்தில் வெற்றிடமாகும் இடங்களை நிரப்புவதற்கே... Read more »
Ad Widget

ஐ.நா நோக்கி பிரித்தானியாவில் ஆரம்பமான போராட்ட பேரணி

தமிழ் இன அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை மற்றும் தமிழீழத்தை வலியுறுத்தி மனித நேய ஈருருளிப் போராட்டப் பேரணி பிரித்தானியாவில் ஆரம்பமாகியது. குறித்த போராட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா கூட்டத்தொடரில் இணையும் அனைத்துலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், ஆதரவினை... Read more »

மறைந்து போகும் மெக்ஸிகோ வளைகுடா

உலகில் காணப்படும் பனிப்பாறைகள் விரைவாக உருகுவதால், மெக்ஸிகோ வளைகுடா நீரோடை மறைந்து போகக்கூடும் என விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். அதிகரித்து வரும் வாயு வெளியேற்றம் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு, பூமியில் பனிப்பாறைகள் அதிகளவு உருகுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை கட்டுப்படுத்தாவிட்டால், 2025ம் ஆண்டுக்குள், வளைகுடா நீரோடை... Read more »

எல் செல்வடோர்: நாட்டின் நிலைமையை மாற்றிய இளம் ஜனாதிபதி

எல் செல்வடோர் என்பது மத்திய அமெரிக்காவில் உள்ள மிகச்சிறிய மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு. ஒரு காலத்தில் இந்த நாடு குற்றங்கள், ஊழல், கொலைகளுக்கு முகவரியாக விளங்கியது. எனினும் தற்போது அந்த நிலைமை முற்றாக மாறியுள்ளது. ஜனாதிபதி Nayib Armando Bukele Ortez... Read more »

பிரான்ஸிற்கும் உக்ரையினுக்கும் இடையில் முக்கிய உடன்படிக்கை

பிரான்ஸிற்கும் உக்ரையினுக்கும் இடையில் இருதரப்பு பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்ததில் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் மற்றும் உக்ரையன் ஜனாதிபதி பிளடிமீர் செலன்ஸ்கி ஆகியோர் கையோப்பம் இடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த உடன்படிக்கையானது நாளை வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளதாகவும்... Read more »

போரில் தோற்றால் புடின் கொல்லப்படுவார்-எலன் மாஸ்க்

உக்ரைனுடனான போரில் ரஷ்யா தோற்காது எனவும் தோல்வியடைந்தால் ரஷ்ய ஜனாதிபதி விளாடீமிர் புடின் கொல்லப்படுவார் எனவும் உலக செல்வந்தரான எலன் மாஸ்க் தெரிவித்துள்ளார். அமெரிக்க குடியரசு கட்சியின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற விவாதத்தின் போதே மாஸ்க் இந்த கருத்தை முன்வைத்துள்ளார். உக்ரைனுடனான போரில் ரஷ்யா தோற்பதற்கான... Read more »

வயிற்றுக்கோளாறு : விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்ட பயணி

விமானம் புறப்படுவதற்குமுன் கழிவறையை அதிகமாகப் பயன்படுத்தியதாகக் கூறி, பெண் பயணி ஒருவர் விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது. மெக்சிகோவிலிருந்து கிளம்பிய வெஸ்ட்ஜெட் விமானத்தில் தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து ஜோவனா சியூ என்ற அப்பயணி ‘எக்ஸ்’ வழியாகப் பகிர்ந்துகொண்டுள்ளார். ”தனக்கு வயிற்றுக்கோளாறு... Read more »

இந்தோனேசியாவில் ஜனாதிபதி தேர்தல்

இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தலில் பிரபோவோ சுபியாந்தோ (Prabowo Subianto) முன்னணியில் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, நடைபெற்று நிறைவடைந்த முதல் கட்ட வாக்களிப்பில் பிரபோவோ சுபியாந்தோவுக்கு 59.77 வீத வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்நிலையில், இந்தோனேசியா முழுவதிலும் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் மாதிரி... Read more »

பனிப்புயல்: 1200 இற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து – பாடசாலைகள் மூடப்பட்டன

பனிப்புயல் காரணமாக அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக 1,220 இற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், பனிப்புயல் தாக்கத்தினால் நியூயோர்க் நகரிலுள்ள பாடசாலைகள் மூடப்பட்டதுடன், வாகனம் செலுத்துவதனை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்... Read more »