செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய சிரேஸ்ட ஊடகவியலாளரின் மகன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கிளிநொச்சி உதயநகர் பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது. குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உதயநகர் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட வீட்டு நாய்... Read more »
மன்னார் – கீரிபகுதியில் இறைச்சிக்காக கடத்தப்பட்ட ஆமைகளுடன் 2 பேர் கைது! மன்னார் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கீரி பகுதியைச் சேர்ந்த 50 மற்றும் 55 வயதுடையவர்கள் என மன்னார் பொலிஸ் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.... Read more »
வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது அனுராதபுரம் – எலயபத்துவ பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் தாயும் அவரது இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளதுடன், பிள்ளைகளின் தந்தை தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 10 வயது... Read more »
பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்ற இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொண்டார் இதுவே பதவி நீக்கப்பட்ட பின்னர் அவர், பொது நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட முதலாவது சந்தர்ப்பமாகும். நிகழ்வில் அவரது சகோதரரும்,... Read more »
நீதிமன்றில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஊடகவியலாளருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வீடு முற்றுகையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – மானிப்பாய் கட்டுடை அரசடி வீதியிலுள்ள ஊடகவியலாளர் எஸ். ஆர். கரனின் வீடே இவ்வாறு இன்று மாலை முற்றுகையிடப்பட்டுள்ளது. குறித்த ஊடகவியலாளரின் வீட்டுக்கு முன்புள்ள வயல்... Read more »
மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர் களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும், அந்த மருந்துகளை வழங்க விரும்புவோர் நன்கொடைப் பிரிவின் 0777-468503 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்குமாறும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர கோருகின்றார். மேலும், வயது... Read more »
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான “ஏ” அணி போட்டிகளுக்கு குசல் ஜனித் பெரேரா உட்பட பல வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் வகையில் வீரர்கள் “ஏ” அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் துவிச்சக்கரவண்டியில் தனது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்கிறார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையினால் எரிபொருளை பெறுவதில் பெரும் இடர்பாடுகள் காணப்படுகின்றன. கியூ. ஆர் முறையிலேயே தற்போது எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது. எனவே எரிபொருளை... Read more »
அமெரிக்காவில் நாய் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் தனது ட்ரக்கின் பின் இருக்கையில் பாதுகாப்பின்றி துப்பாக்கியை விட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில், நாய் பின் இருக்கையில் குதித்து துப்பாக்கியை மிதித்ததில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. உயிரிழந்தவர் 32... Read more »
இலங்கையிலிருந்து சுமார் ஒரு கோடி 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்திச்சென்ற 2 இலங்கை பெண்களை சுங்கத்தினர் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் பெரும் அளவில்... Read more »