பொதுமக்களின் வரிச்சுமை குறித்து சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள செய்தி!

பெரும் இன்னல்களுக்கு மத்தியில் வாழ்க்கையை நகர்த்தும் மக்கள் மீது புதிய வரிச்சுமையை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரின் எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு “பிரபஞ்சம்”வேலைத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.

புதிய வரிச்சுமை

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 36 ஆவது கட்டமாக மற்றுமொரு பேருந்து, காலி சித்தார்த்த தேசியப் பாடசாலைக்கு சஜித் பிரேமதாஸவால் நேற்று(14.10.2022) அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சி தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பண்டோரா ஆவணங்கள்

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,“அரசாங்கம் பொருளாதார ரீதியாக மட்டுமன்றி கருத்தியல் ரீதியாகவும் கூட வங்குரோத்து நிலையில் உள்ளது.

மக்கள் மீது வரம்பற்ற அழுத்தத்தை ஏற்படுத்தும் விசித்திரமான வரியாக இது மாறியுள்ளது.

அரச வருமானத்தை அதிகரிப்பதற்குள்ள ஒரே வழி, வரி அதிகரிப்பு மாத்திரமல்ல. பண்டோரா ஆவணங்கள் மூலம் பெயரிடப்பட்ட நபர்கள் வைத்திருக்கும் டொலர்களையும் நாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்.”என தெரிவித்துள்ளார்.

 

Recommended For You

About the Author: webeditor