
(16) கல்முனை சந்தாங்கனி பொது மைதானத்திலே இடம்பெற்ற கல்முனை சனி மவுண்ட் மற்றும் மருதமுனை எவரடி விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான உதைப்பந்தாட்ட போட்டியில் பெணால்டி அடிப்படையில் கல்முனை சனி மவுண்ட் அணியினர் வெற்றி பெற்று அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் பிரிவில் ஏ பிரிவில் சம்பியனானக தெரிவு தெரிவு செய்யப்பட்டது.
அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட லீக்கின் தலைவர் எம். ஐ. எம்அப்துல் மனாப் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இன் நிகழ்வில் பிரதம அதிதியாக காரைத்தீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் தயானந்தன், அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட லீக்கின் செயலாளர் வை. கே. ரஹ்மான், உப தலைவர்களில் ஒருவரும் தொழினுட்பக் குழுவின் தவிசாளர் எம். எஸ் . எம் பளீல் இன்னும் பலர் கலந்து கொண்டனர்.